» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
வரதட்சணை நகைகளைத் திரும்பக் கேட்ட தாய் : காவல் நிலையத்தில் புதுப்பெண் அதிரடிப் புகார்!
திங்கள் 13, ஜூலை 2026 4:58:41 PM (IST)
திருமணத்தின் போது வரதட்சணையாகக் கொடுத்த நகைகளைத் திரும்பக் கேட்டுத் தகராறு செய்த தாயார் மீது புதுப்பெண் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே ஜூன் 15 அன்று மீனவ கிராமத்தைச் சேர்ந்த புதுப்பெண்ணுக்கும் இளைஞருக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது தாயார் தன் மகளுக்கு 25 பவுன் நகைகள் மற்றும் ரூ.2 லட்சம் ரொக்கத்தை வரதட்சணையாக வழங்கியுள்ளார்.
திருமணக் கடன்களை அடைப்பதற்காக மகளுக்குக் கொடுத்த நகைகளைத் தாயார் உறவினர்களுடன் சென்று திரும்பக் கேட்டுத் தகராறில் ஈடுபட்டுள்ளார். நகைகளைத் தர மறுத்த புதுப்பெண், தன் தாய் மீது குளச்சல் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
காவல்துறையினர் இருதரப்பையும் அழைத்து விசாரித்த போது கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. புதுப்பெண் தன் நகைகள் அனைத்தையும் தாயாரிடம் ஒப்படைத்துவிட்டதாகக் கூறி, தாயாரிடம் உள்ள தன் ஆதார் கார்டு மற்றும் கல்விச் சான்றிதழ்களை மீட்டுத் தருமாறு கோரினார். வரதட்சணை விவகாரம் என்பதால் நீதிமன்றத்தை நாடித் தீர்வு காணுமாறு அறிவுறுத்தி, இருதரப்பிடமும் எழுதி வாங்கிவிட்டுக் காவல்துறையினர் அனுப்பி வைத்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மகளிர் விளையாட்டு விடுதியில் ஆட்சியர் திடீர் ஆய்வு: வீராங்கனைகளுடன் கலந்துரையாடல்!
திங்கள் 13, ஜூலை 2026 12:54:36 PM (IST)

திருநெல்வேலி – நாகர்கோவில் – திருவனந்தபுரம் வழித்தடத்தில் நேரடி இரயில் இயக்க கோரிக்கை!
திங்கள் 13, ஜூலை 2026 12:12:25 PM (IST)

குமரி மாவட்ட சுற்றுலாத்தலங்களை மேம்படுத்த நடவடிக்கை: அமைச்சர் ராஜேஷ் குமார் ஆய்வு
சனி 11, ஜூலை 2026 5:03:29 PM (IST)

மது போதையில் சாலையில் கிடந்த இளம்பெண், வாலிபர் : போலீசார் விசாரணை!
சனி 11, ஜூலை 2026 3:35:23 PM (IST)

கிராமப்புற விளையாட்டு வீரர்களை உருவாக்க நடவடிக்கை: மினி மைதானப் பணிகளை ஆட்சியர் ஆய்வு!
சனி 11, ஜூலை 2026 12:44:31 PM (IST)

இரயில் நிலையங்களில் ₹10 கட்டணத்தில் பேட்டரி கார் வசதி: கோட்ட மேலாளருக்கு கோரிக்கை!
புதன் 8, ஜூலை 2026 4:33:40 PM (IST)


