» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை - விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு
செவ்வாய் 7, ஜூலை 2026 4:43:28 PM (IST)
வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் தமிழக அரசின் உதவித்தொகைப் பெற விண்ணப்பிக்கலாம் என்று கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 10-ம் வகுப்பு தேர்ச்சிபெறாதவர் மற்றும் அதற்கு மேலும் உள்ள கல்வித்தகுதியை பதிவுசெய்து 5 ஆண்டுகள் முடிவடைந்து தொடர்ந்து புதுப்பித்தல் செய்துவரும் பதிவுதாரர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது 01.07.2026 முதல் 30.09.2026-ம் தேதி வரையிலான காலத்திற்கு உதவித்தொகை வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து 30.06.2026 தேதியில் 5 ஆண்டுகள் நிறைவு செய்திருத்தல் வேண்டும். 30.09.2026 அன்று உச்சவயது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 45 வயதுக்குள்ளும் மற்ற அனைத்து பிரிவினர்களுக்கு 40 வயதுக்குள்ளும் முடிவடையாமல் இருக்க வேண்டும். உதவித்தொகை பெறுவதற்கு குடும்பஆண்டு வருமானம் 72,000/- ரூபாய்க்கு மிகைப்படாமல் இருத்தல் வேண்டும். மாற்றுத்திறனாளிகளைப் பொறுத்தவரை பதிவுசெய்து 30.06.2026 தேதியில் ஒருவருடம் முடிவுற்றிருந்தால் போதுமானது. மேலும் மாற்றுத்திறனாளி பதிவுதாரர்களுக்கு வயதுவரம்பு மற்றும் வருமான உச்சவரம்பு ஏதுமில்லை.
பொதுப்பிரிவு பதிவுதாரர்களைப் பொறுத்தவரை பள்ளியிறுதி வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.200/-ம், பள்ளியிறுதி வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300/-ம், ப்ளஸ்-2 தேர்ச்சிக்கு ரூ.400/-ம், பட்டதாரிகளுக்கு ரூ.600/-ம் மற்றும் மாற்றுத்திறனாளிகளை பொறுத்தவரை பள்ளியிறுதி வகுப்பிற்கு கீழ் மற்றும் பள்ளியிறுதி வகுப்பு தேர்ச்சிக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.600/-ம் , ப்ளஸ்-2 தேர்ச்சிக்கு ரூ.750/-ம், பட்டதாரிகளுக்கு ரூ.1000/-ம் தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது என்ற விவரம் தெரிவிக்கப்படுகிறது.
இந்த உதவித்தொகையினை பெற மனுதாரர் பள்ளி அல்லது கல்லூரிப் படிப்பை தமிழகத்திலேயே முடித்து இங்கேயே 15 ஆண்டுகள் வசிப்பவராக இருக்க வேண்டும். அரசிடமிருந்து வேறு எந்தவகையிலும் எந்தவிதமான உதவித்தொகையும் பெறுவராக இருத்தல்கூடாது. தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்து தொழிலாளர் பொது வருங்கால நிதி ஈட்டுறுதி அலுவலகத்தில் கணக்குஎண் பெற்றவராக இருத்தல் கூடாது. மனுதாரர் முற்றிலுமாக வேலையில்லாதவராகவே இருக்க வேண்டும். பள்ளிக்கல்வி/கல்லூரிக் கல்வி மற்றும் தொழில்சார்ந்த கல்வி நிறுவனங்களுக்கு தினமும் சென்று படிக்கும் மாணவ மாணவியராக இருக்கக் கூடாது. ஆனால் தொலைதூரக் கல்வி மற்றும் அஞ்சல்வழிக்கல்வி கற்கும் மனுதாரர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
பொறியியல், மருத்துவம், கால்நடை மருத்துவம், விவசாயம், சட்டம் போன்ற தொழிற் பட்டப்படிப்புகள் படித்த பதிவுதாரர்களுக்கும் வேலைவாய்ப்பற்றோர் நிவாரணம் பெற இயலாது.
வேலைவாய்ப்பற்றோருக்கான உதவித்தொகை வாங்கினால் வேலைவாய்ப்பு அலுவலகத்திலிருந்து தங்களது பரிந்துரைவாய்ப்பு பறிபோகுமோ என பதிவுதாரர்கள் அச்சப்படத் தேவயில்லை. உதவித்தொகை வழங்கப்படும் காலத்திலும் பதிவுதாரர்களது கல்வித்தகுதி, வயது மற்றும் பதிவுமூப்புக்குட்பட்டு அறிவிக்கப்படும் காலியிடங்களுக்கு தொடர்ந்து அரசின் விதிமுறைப்படி பரிந்துரைக்கு பரிசீலிக்கப்படும்.
எனவே, மேற்கூறிய தகுதி மற்றும் விருப்பமுடைய பதிவுதாரர்கள் தங்களது அசல் கல்விச்சான்றிதழ், மாற்றுக்கல்விச் சான்றிதழ் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அடையாள அட்டையுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அலுவலக வேலைநாட்களில் நேரில் வருகைதந்து உதவித்தொகைக்கான விண்ணப்பபடிவம் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் ஏற்கனவே உதவித்தொகை பெற்றவர்கள் மற்றும் பெற்றுக்கொண்டிருக்கும் பயனாளிகள் மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை.
மூன்று ஆண்டுகளுக்கு குறைவாக இத்திட்டத்தின்கீழ் உதவித்தொகையை பெற்றுவரும் பயனாளிகள் இந்த உதவித்தொகையினை தொடர்ந்து பெறவேண்டுமானால் (மாற்றுத்திறனாளிகள் பொறுத்தவரையில் 10 ஆண்டுகள்தொடர்ந்துபெறவேண்டுமானால்) சுயஉறுதிமொழி (AFFIDAVIT) ஆவணத்தை ஒவ்வொரு வருடமும் அலுவலகத்தில் ஒப்படைப்பு செய்யுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப், தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் செ.ராஜேஷ் குமார் ஆய்வு
செவ்வாய் 7, ஜூலை 2026 12:44:21 PM (IST)

மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர்க்கும் நாள் : ரூ.2.79 இலட்சம் மதிப்பில் நலதிட்ட உதவிகள்
திங்கள் 6, ஜூலை 2026 5:51:33 PM (IST)

கன்னியாகுமரி புதிய டிஎஸ்பி பிரகாஷ் பொறுப்பேற்பு!
திங்கள் 6, ஜூலை 2026 3:48:24 PM (IST)

சின்னமுட்டம் துறைமுகத்தில் மீனவர்களிடையே பயங்கர மோதல்: கல்வீச்சு தாக்குதலில் 5பேர் காயம்!
திங்கள் 6, ஜூலை 2026 12:01:28 PM (IST)

மீன்பிடி வலையில் சிக்கிய 7 அடி நீள மலைப்பாம்பு: பெரியகுளத்தில் பரபரப்பு!
ஞாயிறு 5, ஜூலை 2026 1:59:24 PM (IST)

அரசுப் பேருந்து மீது மர்ம நபர்கள் கல் வீசித் தாக்குதல் : குமரி - கேரள எல்லைப் பகுதியில் பரபரப்பு!
சனி 4, ஜூலை 2026 5:54:47 PM (IST)


