» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
மீன்பிடி வலையில் சிக்கிய 7 அடி நீள மலைப்பாம்பு: பெரியகுளத்தில் பரபரப்பு!
ஞாயிறு 5, ஜூலை 2026 1:59:24 PM (IST)

திங்கள்சந்தை உடையார்பள்ளம் அருகே உள்ள பெரியகுளத்தில் மீன்பிடி வலையில் சிக்கிய 7 அடி நீளம் கொண்ட பிரமாண்ட மலைப்பாம்பைத் தீயணைப்புத்துறையினர் பாதுகாப்பாகப் பிடித்துச் சென்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்சந்தை உடையார்பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவர் அப்பகுதியில் உள்ள பெரியகுளத்தில் மீன் பிடிப்பதற்காக வழக்கம் போல் வலையை விரித்துச் சென்றுள்ளார். பின்னர் குளத்திற்கு வந்து வலையை எடுத்துப் பார்த்தபோது, அதற்குள் ஏதோ ஒரு பெரிய உருவம் சிக்குண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
நெருங்கிச் சென்று பார்த்தபோது, மீன்களுக்குப் பதிலாக சுமார் 7 அடி நீளம் கொண்ட ராட்சத மலைப்பாம்பு ஒன்று வலையிலிருந்து தப்பிக்க முடியாமல் சிக்கியிருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த கிருஷ்ணன் மற்றும் அப்பகுதி பொதுமக்கள், உடனடியாக இதுகுறித்து தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் கிடைத்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், மலைப்பாம்பை லாவகமாகப் பிடித்தனர். பிடிபட்ட 7 அடி நீள மலைப்பாம்பு, பொதுமக்கள் நடமாட்டம் இல்லாத அடர்ந்த வனப்பகுதிக்குள் பாதுகாப்பாக விடுவிப்பதற்காகக் கொண்டு செல்லப்பட்டது. இச்சம்பவத்தால் உடையார்பள்ளம் பெரியகுளப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கன்னியாகுமரி புதிய டிஎஸ்பி பிரகாஷ் பொறுப்பேற்பு!
திங்கள் 6, ஜூலை 2026 3:48:24 PM (IST)

சின்னமுட்டம் துறைமுகத்தில் மீனவர்களிடையே பயங்கர மோதல்: கல்வீச்சு தாக்குதலில் 5பேர் காயம்!
திங்கள் 6, ஜூலை 2026 12:01:28 PM (IST)

அரசுப் பேருந்து மீது மர்ம நபர்கள் கல் வீசித் தாக்குதல் : குமரி - கேரள எல்லைப் பகுதியில் பரபரப்பு!
சனி 4, ஜூலை 2026 5:54:47 PM (IST)

அணுக்கனிம அரசாணை ரத்து: முதல்வர் விஜய்யிடம் அமைச்சர் செ.ராஜேஷ்குமார் கோரிக்கை!
வெள்ளி 3, ஜூலை 2026 10:44:23 AM (IST)

அனைத்து ரயில் நிலையங்களிலும் பாரத் டாக்ஸி சேவை : மத்திய அரசுக்கு கோரிக்கை
வியாழன் 2, ஜூலை 2026 7:52:29 AM (IST)

சென்னை-நாகர்கோவில் வழித்தடத்தில் 100% முன்பதிவு: 2025-2026 நிதியாண்டில் 803.86 கோடி வருவாய்!
புதன் 1, ஜூலை 2026 8:14:04 PM (IST)


