» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

போலீசாரை அரிவாளால் வெட்ட முயன்ற வாலிபர் கைது

வியாழன் 21, ஆகஸ்ட் 2025 8:22:09 PM (IST)

தூத்துக்குடியில் ரோந்து சென்ற போது போலீசாரை அரிவாளால் வெட்ட முயன்ற வாலிபரை போலீசார்  கைது செய்தனர்.

தூத்துக்குடி மாதாநகர் 6-வது தெருவை சேர்ந்தவர் தாமரைக்கண்ணன் (20) இவர் மீது தாளமுத்துநகர், தெர்மல்நகர், மத்தியபாகம் மற்றும் வடபாகம் ஆகிய காவல் நிலையங்களில் கஞ்சா உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது, இந்நிலையில் தாளமுத்துநகர் சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜா தலைமையிலான போலீசார் ரோந்து சென்ற போது, மேட்டுப்பட்டி சுடுகாடு பகுதியில் சுற்றித்திரிந்த தாமரைகண்ணனிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது திடீரென்று மறைத்து வைத்த அரிவாளை எடுத்து போலீசாரை வெட்ட முயன்றுள்ளார். இதனால் சுதாரித்துக் கொண்ட போலீசார் தாமரை கண்ணனை மடக்கி பிடித்து அவரிடம் இருந்த அரிவாளை பறிமுதல் செய்து, சோதனை செய்தபோது அவரிடம் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது. அதனை விற்பனைக்காக வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தாமரை கண்ணனை கைது செய்த போலீசார் ஆயுத தடுப்பு சட்டம் மற்றும் கஞ்சா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 


மக்கள் கருத்து

அன்புAug 22, 2025 - 09:19:02 AM | Posted IP 104.2*****

எல்லாம் ஏரியாலயும் இதே மாதிரி கஞ்சா வித்துக்கிட்டு குடிச்சிட்டு தான் இருக்கான் ஒரு ஏரியும் போலீஸ் செஞ்ச மாதிரி இல்ல அருவாளை வைத்து வெட்டு வந்த நியூஸ் நம்ப முடியும் இல்ல நீங்க சொல்ற மாதிரி புடிக்கும்னு நினைச்சா தூத்துக்குடி ஃபுல்லா புடிக்கணும்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory