» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
போலீசாரை அரிவாளால் வெட்ட முயன்ற வாலிபர் கைது
வியாழன் 21, ஆகஸ்ட் 2025 8:22:09 PM (IST)
தூத்துக்குடியில் ரோந்து சென்ற போது போலீசாரை அரிவாளால் வெட்ட முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாதாநகர் 6-வது தெருவை சேர்ந்தவர் தாமரைக்கண்ணன் (20) இவர் மீது தாளமுத்துநகர், தெர்மல்நகர், மத்தியபாகம் மற்றும் வடபாகம் ஆகிய காவல் நிலையங்களில் கஞ்சா உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது, இந்நிலையில் தாளமுத்துநகர் சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜா தலைமையிலான போலீசார் ரோந்து சென்ற போது, மேட்டுப்பட்டி சுடுகாடு பகுதியில் சுற்றித்திரிந்த தாமரைகண்ணனிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது திடீரென்று மறைத்து வைத்த அரிவாளை எடுத்து போலீசாரை வெட்ட முயன்றுள்ளார். இதனால் சுதாரித்துக் கொண்ட போலீசார் தாமரை கண்ணனை மடக்கி பிடித்து அவரிடம் இருந்த அரிவாளை பறிமுதல் செய்து, சோதனை செய்தபோது அவரிடம் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது. அதனை விற்பனைக்காக வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தாமரை கண்ணனை கைது செய்த போலீசார் ஆயுத தடுப்பு சட்டம் மற்றும் கஞ்சா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தண்டவாள பராமரிப்பு பணி: தென்மாவட்ட ரயில் போக்குவரத்தில் மாற்றம்
சனி 23, ஆகஸ்ட் 2025 8:30:27 AM (IST)

குமரி மாவட்டத்தில் ரூ.8.03 கோடி மதிப்பில் புதிய பாலம், கட்டிடங்கள்: முதல்வர் திறந்து வைத்தார்!
வெள்ளி 22, ஆகஸ்ட் 2025 5:19:32 PM (IST)

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு : மீனவர்கள் வேலை நிறுத்தம் - ஆர்ப்பாட்டம்!
வெள்ளி 22, ஆகஸ்ட் 2025 12:49:08 PM (IST)

இளைஞர்களுக்கு ஃபோர்க்லிஃப்ட் ஆப்பரேட்டர் பயிற்சி : ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்!
வெள்ளி 22, ஆகஸ்ட் 2025 12:03:47 PM (IST)

நாகர்கோவிலில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
வெள்ளி 22, ஆகஸ்ட் 2025 11:36:02 AM (IST)

பொதுவுடைமை வீரர் ப.ஜீவானந்தம் பிறந்த நாள் விழா : ஆட்சியர், மேயர் அரசியல் கட்சியினர் மரியாதை!
வியாழன் 21, ஆகஸ்ட் 2025 3:13:54 PM (IST)

அன்புAug 22, 2025 - 09:19:02 AM | Posted IP 104.2*****