» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

பொதுவுடைமை வீரர் ப.ஜீவானந்தம் பிறந்த நாள் விழா : ஆட்சியர், மேயர் அரசியல் கட்சியினர் மரியாதை!

வியாழன் 21, ஆகஸ்ட் 2025 3:13:54 PM (IST)



பொதுவுடைமை வீரர் ப.ஜீவானந்தம் பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, அன்னாரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி, மரியாதை செலுத்தினார்.

பொதுவுடமை வீரர் ப.ஜீவானந்தம் 119-வது பிறந்தநாளை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின்கீழ், நாகர்கோவில், வேப்பமூடு சந்திப்பில் அமைந்துள்ள ஜீவா நினைவு மண்டபத்திலுள்ள, அன்னாரது திருவுருவ சிலைக்கு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா இன்று மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் அவர் தெரிவிக்கையில்- பொதுவுடமை வீரர் ப.ஜீவா 21.08.1907-ம் நாள் பிறந்தார். தந்தையின் பெயர் பட்டன்பிள்ளை. தாயார் பெயர் உமையம்மை. இவரது இயற்பெயர் சொரிமுத்து. கன்னியாகுமரி மாவட்டம், பூதப்பாண்டி தொடக்கப்பள்ளியில் பள்ளிப்படிப்பை பயின்ற பின்னர், கோட்டார் உயர்நிலைப்பள்ளியில் பயின்றார். 

புரட்சிகரமான கொள்கைகளாலும், சமுதாயத்தொண்டால், இலக்கிய சேவையால், சுதந்திரப்போராட்ட தியாகத்தால் குமரிக்கு தனிப்பெருமை சேர்த்தவர் எனும் புகழுக்குரியவர் பொதுவுடைமை வீரர் ப.ஜீவானந்தம் ஆவார்கள். 1955-ம் ஆண்டு சென்னை பல்கலைக்கழக செனட் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். 

கன்னியாகுமரி மாவட்ட இணைப்பு போராட்டத்தில் தீவிர பங்குபெற்ற, பொதுவுடைமை வீரர் ப.ஜீவானந்தம் 18.01.1963-ம் நாள் இவ்வுலகை விட்டு மறைந்தார். இன்று அன்னாரது திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்துவதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன் என்று தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில உணவு ஆணையத் தலைவர் என்.சுரேஷ் ராஜன், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பா.ஜாண் ஜெகத் பிரைட், துணை மேயர் மேரி பிரின்சி லதா, அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியர் கந்தசாமி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) செல்வலெட் சுஷ்மா, நாகர்கோவில் மாநகராட்சி மண்டல தலைவர் ஜவஹர், மாநகராட்சி உறுப்பினர் விஜிலா ஜஸ்டஸ், முன்னாள் இராஜக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் சரவணன், வழக்கறிஞர் சதாசிவம், முன்னாள் இந்து சமய அறங்காவலர் குழு தலைவர் (சுசீந்திரம்) பிரபா ஜி இராமகிருஷ்ணன், காரவிளை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க முன்னாள் தலைவர் ஆனந்த், அகஸ்தீசன் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

காங்கிரஸ் கட்சி சார்பில் மாநகர் மாவட்ட தலைவர் நவீன்குமார் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. முன்னாள் மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், மாவட்ட துணை தலைவர் மாதவன் மற்றும் வடலி மகாலிங்கம், டென்னிஸ், தவசிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அண்ணா விளையாட்டரங்கம் முன்புள்ள ஜீவா சிலைக்கு அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அமைப்பு செயலாளர் பச்சைமால், முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன், மாவட்ட துணை செயலாளர் சுகுமாரன், இணை செயலாளர் சாந்தினி பகவதியப்பன், மாநில மீனவர் அணி இணை செயலாளர் பசிலியான் நசரேத், மாநில நிர்வாகிகள் சந்துரு, ராணி, கவுன்சிலர்கள் ஸ்ரீலிஜா, அக்சயா கண்ணன், ஒன்றிய செயலாளர் முத்துக்குமார், பகுதி செயலாளர்கள் ஜெயகோபால், அணி செயலாளர்கள் ரபீக், ஜெயசீலன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் சுபாஷ் சந்திரபோஸ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory