» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
ஐயப்ப பக்தர்கள் சீசன் நவ. 17ல் தொடக்கம்: குமரியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
சனி 1, நவம்பர் 2025 12:09:30 PM (IST)
கன்னியாகுமரியில் ஐயப்ப பக்தர்கள் சீசனை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்படவுள்ளதாக, டிஎஸ்பி ஜெயச்சந்திரன் தெரிவித்தார்.
நிகழாண்டு சபரிமலை சீசன் நவ. 17இல் தொடங்கி ஜன. 20ஆம் தேதி வரை 65 நாள்கள் நீடிக்கிறது. இதையொட்டி, பக்தர்கள், சுற்றுலாப் பயணிகளுக்கு நகராட்சி நிர்வாகம் சார்பில் அடிப்படை வசதிகள் செய்யப்படவுள்ளன. இதேபோல, காவல் துறை சார்பிலும் பல்வேறு நட வடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதுகுறித்து டிஎஸ்பி ஜெயச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறியது: சபரிமலை ஐயப்ப பக்தர்கள் சீசனை முன்னிட்டு, கன்னியாகுமரியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. சுழற்சி முறையில் 24 மணி நேரமும் போலீசார் பணியாற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக மாவட்டம் முழுவதுமிருந்து கூடுதலாக 200 போலீசார் நியமிக்கப்படவுள்ளனர்.
போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் அதிக போக்குவரத்து போலீசார் ஈடுபடுத்தப்படவுள்ளனர். போக்குவரத்து நெரிசலை சமாளிக்க சில இடங்களில் ஒருவழிப் பாதை அமல்படுத்தப்படவுள்ளது. ஊர்க்காவல் படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவர்.
கன்னியாகுமரி நகரப் பகுதியில் காந்தி மண்டபம் சந்திப்பு, சூரிய அஸ்தமனப் பூங்கா கடற்கரைப் பகுதி, சிலுவை நகர், பழைய பேருந்து நிலைய ரவுண்டானா சந்திப்பு, தமிழ்நாடு ஹோட்டல் ஆகிய 5 இடங்களில் புறக் காவல் நிலையங்கள் அமைக்கப்படும். முக்கிய சந்திப்புகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்.
விவேகானந்தர் மண்டபத்துக்குச் செல்லும் படகுத் துறை, பகவதியம்மன் கோயில், முக்கடல் சங்கமம் கடற்கரைப் பகுதி உள்ளிட்ட முக்கிய இடங்களில் 24 மணி நேரமும் பாதுகாப்புக்காக போலீசார் நிறுத்தப்படுவர். கடலோரப் பாதுகாப்புக் குழும போலீசாரும் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபடுவர்.
தங்கும் விடுதிகளில் கட்டண விவரப் பட்டியலை கட்டாயம் வைக்க வேண்டும். வியாபாரிகள், உணவக- விடுதி உரிமையாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், நடமாடும் சிறு வியாபாரிகள், புகைப்படக் கலைஞர்கள் ஆகியோருடன் தனித்தனியே கலந்தாய்வுக் கூட்டம் நடத்தப்படும். சுற்றுலாப் பயணிகளிடம் கனிவுடன் பேசி வியாபாரம் செய்ய அறிவுறுத்தப்படும் என்று தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அம்ரித் பாரத் ரயில்களில் மாற்றங்கள் வருமா? குமரி மாவட்ட பயணிகள் கோரிக்கை!
வெள்ளி 6, பிப்ரவரி 2026 3:33:39 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் உலக புற்றுநோய் தின விழிப்புணர்வு பேரணி
புதன் 4, பிப்ரவரி 2026 1:22:15 PM (IST)

முதல்வர் மு.க. ஸ்டாலின் 19ம் தேதி குமரி வருகை : அரசு விழாவில் பங்கேற்கிறார்!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 12:15:42 PM (IST)

நாகர்கோவில் மார்டன் பள்ளியில் விதைப்பந்து விழிப்புணர்வு
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 10:49:12 AM (IST)

விளவங்கோடு அருகே குளத்தில் ஆண் சடலம் மீட்பு!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 10:47:38 AM (IST)

திருவனந்தபுரம் - நாகர்கோவில் மூன்றாவது ரயில் பாதை : பட்ஜெட்டில் அறிவிக்கப்படுமா?
சனி 31, ஜனவரி 2026 12:07:03 PM (IST)

