» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தேவாலயங்களை பழுது பார்க்க ரூ.20 இலட்சம் வரை மானியம் : விண்ணப்பங்கள் வரவேற்பு!

செவ்வாய் 29, ஜூலை 2025 10:10:38 AM (IST)

கிறித்துவ தேவாலயங்களை பழுதுபார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு அரசு மானியத் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் சொந்தக் கட்டடங்களில் இயங்கும் கிறித்துவ தேவாலயங்களை பழுதுபார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகள் மேற்கொள்ள மானியத் தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

• தேவாலயங்கள் 10 ஆண்டுகளுக்கு  மேலாக சொந்த கட்டடத்தில் இயங்கியிருக்க வேண்டும்.
• தேவாலயத்திற்காக வெளிநாட்டிலிருந்து எவ்வித நிதி உதவியும் வாங்கியிருக்க கூடாது.
• அவ்வாறு ஒரு தேவாலயத்திற்கு மானியத் தொகை வழங்கிய பின்னர் 5 வருடத்திற்கு அத்தேவாலயம் இம்மானியத் தொகை வேண்டி விண்ணப்பிக்க தகுதியற்றது.

மேற்படி திட்டத்தின் கீழ் பின்வரும் கூடுதல் பணிகள் மேற்கொள்ளவும். கட்டடத்தின் வயதிற்கேற்ப மானிய தொகை உயர்த்தியும் அரசு ஆணையிட்டுள்ளது.

கூடுதலாக மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ள பணிகள் விவரம்.

1. தேவாலயங்களில் பீடம் கட்டுதல் (Construction of Pedestal in Churches).
2. கழிவறை வசதி அமைத்தல் (Construction of Toilet facilities).
3. குடிநீர் வசதிகள் உருவாக்குதல் (Creation of Drinking Water facilities)
4. சுவிசேஷம் வாசிக்கும் ஸ்டாண்ட் மைக்செட் (ம) ஒலிப்பெருக்கி
5. நற்கருணை பேழை பீடம்
6. திருப்பலிக்கு தேவையான கதிர் பாத்திரங்கள், சுரூபங்கள், மெழுகுவர்த்தி       ஸ்டான்ட்கள் (ம) பக்தர்கள் அமர்ந்து முழங்காலிட்டு இருக்க தேவையான பெஞ்சுகள் போன்ற ஆலயங்களுக்கு தேவையான உபகரணங்கள்.
7. தேவாலயத்திற்கு சுற்றுச்சுவர் வசதி அமைத்தல்.

தேவாலய கட்டடத்தின் வயதிற்கேற்ப உயத்தப்பட்டுள்ள மானியத் தொகை விவரம்

வ.எண் தேவாலய கட்டடத்தின் வயது தற்போது உயர்த்தி வழங்கப்படும்  மானியம் (ரூ.)

1. 10 முதல் 15 வருடம் வரை - 10 இலட்சம்
2. 15 முதல் 20வருடம் வரை - 15 இலட்சம்
3. 20 வருடத்திற்கு மேல் இருப்பின் - 20 இலட்சம்

இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகி விவரம் அறிந்து கொள்ளலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா  தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory