» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: தலைமை ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது!
வெள்ளி 25, ஜூலை 2025 10:36:40 AM (IST)
கன்னியாகுமரி பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
குமரி மாவட்டம் குலசேகரம் பகுதியில் ஒரு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியின் தலைமை ஆசிரியராக தோட்டவாரத்தை சேர்ந்த ரமேஷ்குமார்(58) என்பவர் பணியாற்றி வருகிறார்.
இவர் பள்ளியில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகள் சிலருக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி மாணவிகள் தங்களது பெற்றோர்களிடம் கூறினர். அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர்களில் சிலர், இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கல்வி அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியருக்கு புகார் தெரிவித்தனர்.
அதன் பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தியதில் மாணவிகளுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்தது உண்மையென தெரியவந்தது. அதேபோல் ஒரு மாணவியின் தாயார் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் தலைமை ஆசிரியர் ரமேஷ்மார் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தண்டவாள பராமரிப்பு பணி: தென்மாவட்ட ரயில் போக்குவரத்தில் மாற்றம்
சனி 23, ஆகஸ்ட் 2025 8:30:27 AM (IST)

குமரி மாவட்டத்தில் ரூ.8.03 கோடி மதிப்பில் புதிய பாலம், கட்டிடங்கள்: முதல்வர் திறந்து வைத்தார்!
வெள்ளி 22, ஆகஸ்ட் 2025 5:19:32 PM (IST)

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு : மீனவர்கள் வேலை நிறுத்தம் - ஆர்ப்பாட்டம்!
வெள்ளி 22, ஆகஸ்ட் 2025 12:49:08 PM (IST)

இளைஞர்களுக்கு ஃபோர்க்லிஃப்ட் ஆப்பரேட்டர் பயிற்சி : ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்!
வெள்ளி 22, ஆகஸ்ட் 2025 12:03:47 PM (IST)

நாகர்கோவிலில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
வெள்ளி 22, ஆகஸ்ட் 2025 11:36:02 AM (IST)

பொதுவுடைமை வீரர் ப.ஜீவானந்தம் பிறந்த நாள் விழா : ஆட்சியர், மேயர் அரசியல் கட்சியினர் மரியாதை!
வியாழன் 21, ஆகஸ்ட் 2025 3:13:54 PM (IST)
