» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
காவல் நிலையத்தில் வியாபாரிகள் முற்றுகை : அஞ்சுகிராமத்தில் பரபரப்பு
புதன் 23, ஜூலை 2025 10:13:33 AM (IST)

அஞ்சுகிராமத்தில் ஆட்டோ டிரைவர்கள் - வியாபாரிகள் பிரச்சனை எதிரொலியாக காவல் நிலையத்தை வியாபாரிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட அப்பகுதி கடை வியாபாரிகள், மெயின் பஜாரில் ஆட்டோக்கள் நிறுத்துவதில் ஏற்பட்டுள்ள பிரச்சனையில், ஆட்டோ ஒட்டுநர்களுக்கு ஆதரவாக ஒருதலை பட்சமாக செயல்படுவதாக கூறியும், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஆதரவாக செயல்படும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
நேற்று ஆட்டோ ஓட்டுநர்கள் குடும்பத்துடன் இரவில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் இன்று கடை வியாபாரிகளின் காவல் நிலையத்தை முற்றுகையிட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தண்டவாள பராமரிப்பு பணி: தென்மாவட்ட ரயில் போக்குவரத்தில் மாற்றம்
சனி 23, ஆகஸ்ட் 2025 8:30:27 AM (IST)

குமரி மாவட்டத்தில் ரூ.8.03 கோடி மதிப்பில் புதிய பாலம், கட்டிடங்கள்: முதல்வர் திறந்து வைத்தார்!
வெள்ளி 22, ஆகஸ்ட் 2025 5:19:32 PM (IST)

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு : மீனவர்கள் வேலை நிறுத்தம் - ஆர்ப்பாட்டம்!
வெள்ளி 22, ஆகஸ்ட் 2025 12:49:08 PM (IST)

இளைஞர்களுக்கு ஃபோர்க்லிஃப்ட் ஆப்பரேட்டர் பயிற்சி : ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்!
வெள்ளி 22, ஆகஸ்ட் 2025 12:03:47 PM (IST)

நாகர்கோவிலில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
வெள்ளி 22, ஆகஸ்ட் 2025 11:36:02 AM (IST)

பொதுவுடைமை வீரர் ப.ஜீவானந்தம் பிறந்த நாள் விழா : ஆட்சியர், மேயர் அரசியல் கட்சியினர் மரியாதை!
வியாழன் 21, ஆகஸ்ட் 2025 3:13:54 PM (IST)
