» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
பெங்களூரு மசாஜ் மையத்தில் கனடா பெண்ணுக்கு பாலியல் தொல்லை: ஊழியர் கைது!
புதன் 11, பிப்ரவரி 2026 12:21:43 PM (IST)
பெங்களூருவில் கனடா நாட்டுப் பெண்ணுக்கு மசாஜ் மையத்தில் பாலியல் தொல்லை கொடுத்த ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடக மாநிலம் பெங்களூரு விதான் சவுதா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் பிரபல ஓட்டல் ஒன்று உள்ளது. இங்கு மசாஜ் மையமும் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்திற்கு கனடா நாட்டைச் சேர்ந்த 44 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் மசாஜ் செய்து கொள்வதற்காகச் சென்றுள்ளார்.
அப்போது அங்கிருந்த ஊழியர், அந்தப் பெண்ணை அரைகுறை ஆடையில் இருக்கும்படி கட்டாயப்படுத்தியுள்ளார். இதற்கு அந்தப் பெண் கடும் மறுப்பு தெரிவித்துள்ளார். இருப்பினும், அந்த ஊழியர் வெளிநாட்டுப் பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், மசாஜ் செய்து கொள்ளாமல் அங்கிருந்து வெளியேறி ஓட்டல் நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளார். ஆனால், நிர்வாகத் தரப்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மேலும், அவரிடம் மசாஜிற்காகப் பெறப்பட்ட ரூ.10,000 கட்டணத்தில், ரூ.7,000 மட்டுமே திருப்பித் தரப்பட்டுள்ளது.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட வெளிநாட்டுப் பெண் இச்சம்பவம் குறித்து ஆன்லைன் வாயிலாக விதான் சவுதா போலீசில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில், போலீசார் ஓட்டல் நிர்வாகம் மற்றும் பாலியல் தொல்லை கொடுத்த ஊழியர் மீது வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
தற்போது, கனடா நாட்டுப் பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த மசாஜ் மைய ஊழியரான 32 வயது வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மில்க்ஷேக்கில் விஷம் கலந்து தந்தையை கொன்ற பெண் காவலர்: 3 ஆண்டுகளுக்குப் பின் அம்பலம்!
ஞாயிறு 29, மார்ச் 2026 10:41:26 AM (IST)

மேற்காசிய நெருக்கடியை முழு பலத்துடன் இந்தியா எதிர்கொண்டு வருகிறது: பிரதமர் மோடி உரை
சனி 28, மார்ச் 2026 4:10:10 PM (IST)

ஏப்ரல் 1 முதல் வங்கி விதிமுறைகளில் அதிரடி மாற்றம்: ஏ.டி.எம் பரிவர்த்தனை கட்டணம் உயர்வு!
சனி 28, மார்ச் 2026 12:18:19 PM (IST)

நாடு முழுவதும் மீண்டும் ஊரடங்கா? சமூக வலைதள வதந்திகளுக்கு மத்திய அரசு விளக்கம்!
வெள்ளி 27, மார்ச் 2026 11:49:11 AM (IST)

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி அதிரடி குறைப்பு: மத்திய அரசு நடவடிக்கை
வெள்ளி 27, மார்ச் 2026 10:49:35 AM (IST)

எரிபொருள் தட்டுப்பாடு என வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை : மத்திய அரசு எச்சரிக்கை!
வெள்ளி 27, மார்ச் 2026 8:32:34 AM (IST)

