» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தூத்துக்குடி விமான நிலையத்தை சர்வதேச தரத்திற்கு உயர்த்த எம்பவர் இந்தியா கோரிக்கை!
ஞாயிறு 15, மார்ச் 2026 7:51:37 PM (IST)

தூத்துக்குடி விமான நிலையத்தின் உட்கட்டமைப்புகளை மேம்படுத்தி, சர்வதேச விமான நிலையமாக மாற்றக் கோரி எம்பவர் இந்தியா அமைப்பின் கௌரவச் செயலாளர் ஏ. சங்கர், மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் கிஞ்சரபு ராம் மோகன் நாயுடுவிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார்.
தூத்துக்குடி விமான நிலையத்தின் பெயரை மாற்றியதற்காக மத்திய அரசிற்குத் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ள எம்பவர் இந்தியா அமைப்பு, பயணிகளின் நலன் கருதிப் பின்வரும் 6 முக்கியக் கோரிக்கைகளை அமைச்சரின் கவனத்திற்கு முன்வைத்துள்ளது:
தூத்துக்குடி விமான நிலையத்தைச் சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்த வேண்டும். மும்பை மற்றும் புதுடெல்லி போன்ற முக்கிய நகரங்களுக்குப் புதிய விமானச் சேவைகளை அறிமுகப்படுத்த வேண்டும். விமான நிலையத்தில் சுங்கக் கிளரன்ஸ் வசதிகளை உருவாக்க சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பயணிகளின் வசதிக்காக நவீன ஆடை மாற்றும் அறைகளை அமைக்க வேண்டும். விமான நிலையத்தில் தங்கும் வசதி மற்றும் ஓய்வு அறை வசதிகளை மேம்படுத்த வேண்டும். பயணிகளுக்குத் தரமான உணவு மற்றும் சிற்றுண்டி கிடைக்க 'உதான் யாத்ரி கஃபே' வசதியை ஏற்படுத்த வேண்டும்.
மேற்கண்ட வசதிகள் அனைத்தும் ஒரு வளர்ந்து வரும் விமான நிலையத்திற்கு அடிப்படைத் தேவைகளாகும். எனவே, இந்த விஷயத்தில் மத்திய அமைச்சர் நேரடியாகத் தலையிட்டு, தூத்துக்குடி மக்களின் நீண்ட காலக் கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வேண்டும் என்று அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காரங்காடு அருகே அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு: போலீசார் விசாரணை!
திங்கள் 16, மார்ச் 2026 4:32:43 PM (IST)

நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலில் 8 கிலோ கஞ்சா பறிமுதல்: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!
ஞாயிறு 15, மார்ச் 2026 10:41:22 AM (IST)

பசுமை சாம்பியன் விருது, தலா ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசு: ஆட்சியர் அழகுமீனா வழங்கினார்
சனி 14, மார்ச் 2026 5:27:34 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு புதிய ரயில் சேவைகள், மாற்றங்கள்: பயணிகள் கோரிக்கை
வெள்ளி 13, மார்ச் 2026 5:27:51 PM (IST)

ஆர்ப்பாட்டத்தில் தனித்து நின்ற தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள்: நாகர்கோவிலில் சலசலப்பு!
வியாழன் 12, மார்ச் 2026 5:31:45 PM (IST)

வளைகுடா நாடுகளில் போர் பதற்றம்: தமிழக மீனவர்களை மீட்க விஜய் வசந்த் எம்.பி. மனு!
வியாழன் 12, மார்ச் 2026 12:27:28 PM (IST)


உண்மை விளம்பிMar 16, 2026 - 12:27:22 AM | Posted IP 104.2*****