» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு புதிய ரயில் சேவைகள், மாற்றங்கள்: பயணிகள் கோரிக்கை
வெள்ளி 13, மார்ச் 2026 5:27:51 PM (IST)

கன்னியாகுமரி மாவட்ட பயணிகளின் வசதிக்காக அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட அமிர்த் பாரத் ரயில்களின் இயக்க நாட்கள் மற்றும் கால அட்டவணையில் மாற்றங்களைச் செய்ய வேண்டும் எனப் பயணிகள் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
குறிப்பாக, வார இறுதி நாட்களில் சென்னைக்கான ரயில் சேவையை அதிகரிக்கவும், ஐதராபாத் மற்றும் மங்களூர் ரயில்களைப் பயனுள்ள வகையில் இயக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தற்போது நாகர்கோவிலிருந்து வியாழக்கிழமை மட்டும் சென்னைக்கு வந்தே பாரத், அமிர்த் பாரத், அனந்தபுரி என மொத்தம் 9 ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதனால் வியாழக்கிழமைகளில் தடையற்ற போக்குவரத்து உள்ளது. ஆனால், பயணிகள் அதிகம் பயணிக்கும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னைக்குக் கூடுதல் ரயில்கள் இல்லாதது பெரும் குறையாக உள்ளது. வார இறுதி நாட்களிலும் 8 முதல் 9 ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என்பதே பயணிகளின் எதிர்பார்ப்பு.
முக்கியக் கோரிக்கைகள் மற்றும் பரிந்துரைகள்:
1. வந்தே பாரத் ரயில் இயங்கும் நாள் மாற்றம்:
நாகர்கோவில் - சென்னை எழும்பூர் வந்தே பாரத் ரயில் தற்போது புதன்கிழமை தவிர்த்து 6 நாட்கள் இயங்குகிறது. வியாழக்கிழமை ஏற்கனவே பல ரயில்கள் இருப்பதால், வந்தே பாரத் ரயில் இயங்காத நாளை புதன்கிழமையிலிருந்து வியாழக்கிழமைக்கு மாற்ற வேண்டும். இதன் மூலம் வாரம் முழுவதும் பகல் நேர ரயில் வசதி சென்னைக்குச் சீராகக் கிடைக்கும்.
2. நாகர்கோவில் - சரளப்பள்ளி (ஐதராபாத்) அமிர்த் பாரத்:
தற்போது வியாழக்கிழமை இரவு புறப்படும் இந்த ரயிலை, சனிக்கிழமை இரவு புறப்படுமாறு மாற்ற வேண்டும். சனிக்கிழமை இரவு புறப்பட்டால் ஞாயிறு மதியம் சென்னை வழியாகச் செல்லும் என்பதால் வார இறுதிப் பயணிகளுக்குப் பயனுள்ளதாக இருக்கும். மேலும், திங்கள் காலை ஐதராபாத் சேருவது அலுவலகப் பணிக்குச் செல்பவர்களுக்கு வசதியாக அமையும்.
3. நாகர்கோவில் - மங்களூர் அமிர்த் பாரத்: செவ்வாய் காலை 11:40-க்குப் புறப்படும் இந்த ரயில் மங்களூர் செல்ல 17 மணி நேரம் 20 நிமிடங்கள் எடுத்துக்கொள்கிறது. இது 14:45-க்குப் புறப்படும் காந்திதாம் எக்ஸ்பிரஸை விட மிக மெதுவானது.
மங்களூருக்கு இரவு நேர ரயில் இயக்க வேண்டும் என்பது 25 ஆண்டுகால கோரிக்கை. எனவே, இந்த அமிர்த் பாரத் ரயிலை இரவு நேர ரயிலாக மாற்ற வேண்டும். மேலும், இரணியல் மற்றும் குழித்துறை ஆகிய முக்கிய நிலையங்களில் கூடுதல் நிறுத்தங்கள் வழங்க வேண்டும்.
பயணிகள் சங்கங்களின் கருத்து: "அமிர்த் பாரத் ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டது வரவேற்கத்தக்கது. ஆனால், அவற்றின் கால அட்டவணை பயணிகளுக்கு முழுமையான பயனைத் தரவில்லை. உரிய மாற்றங்களைச் செய்தால் ரயில்வே துறைக்கு வருவாய் அதிகரிப்பதோடு, பொதுமக்களின் அலைச்சலும் குறையும்," எனப் பயணிகள் சங்கப் பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்.
வியாழக்கிழமை சென்னைக்கு இயங்கும் ரயில்கள்
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆடை உற்பத்தியில் புதுமையைப் புகுத்த வேண்டும் : நெசவாளர்களுக்கு ஆட்சியர் பிரதாப் வேண்டுகோள்
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 5:53:02 PM (IST)

பராமரிப்புப் பணி: குருவாயூர் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 8:42:23 AM (IST)

மயிலாடி சிற்பிகளின் கைவண்ணம்: ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 11 அடி உயர கிருஷ்ணர் சிலை!
வியாழன் 6, ஆகஸ்ட் 2026 12:29:11 PM (IST)

தமிழக ரயில்வே வளர்ச்சிக்காகத் தனி அமைச்சரை நியமிக்க வேண்டும்: பயணிகள் சங்கம் தீர்மானம்!
செவ்வாய் 4, ஆகஸ்ட் 2026 5:54:50 PM (IST)

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆடி களப பூஜை தொடங்கியது- திரளான பக்தர்கள் பங்கேற்பு
செவ்வாய் 4, ஆகஸ்ட் 2026 10:43:32 AM (IST)

வீராணமங்கலம் பழையாற்றில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்: திரளான பெண்கள் பங்கேற்பு!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 9:32:50 PM (IST)


