» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
காசோலை பரிவர்த்தனையில் கூடுதல் பாதுகாப்பு: தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி புதிய அறிவிப்பு
சனி 14, மார்ச் 2026 5:47:47 PM (IST)
ரூ.5 லட்சம் மற்றும் அதற்கு மேற்பட்ட காசோலைகளுக்கு 'பாசிட்டிவ் பே' முறை கட்டாயம் என்று தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி அறிவித்துள்ளது. இந்த நடைமுறை ஏப்.1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி, காசோலை பரிவர்த்தனைகளை மேலும் பாதுகாப்பானதாக்கும் வகையில், 5 லட்சம் ரூபாய் மற்றும் அதற்கு மேற்பட்ட மதிப்பிலான காசோலைகளுக்கு 'பாசிட்டிவ் பே சிஸ்டம்' (Positive Pay System - PPS) எனும் உறுதிப்படுத்தும் முறையைத் தற்போது கட்டாயமாக்கியுள்ளது.
இது குறித்து வங்கியின் கிளை வங்கிப் பிரிவுக்கான தேசியத் தலைவர் மற்றும் செயல் துணைத் தலைவர் பி.ஆர். அசோக் குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: வங்கியின் வாடிக்கையாளர்கள் கிளியரிங், பணப் பரிமாற்றம் (Transfer), NEFT, RTGS அல்லது ரொக்கம் பெறுவதற்காக 5 லட்சம் ரூபாய் அல்லது அதற்கு மேற்பட்ட தொகைக்கு காசோலைகளை வழங்கும்போது, அதனை வழங்கியவர் (Drawer) வங்கியிடம் முன் கூட்டியே 'பாசிட்டிவ் பே' முறையில் உறுதிப்படுத்த வேண்டும். அவ்வாறு உறுதிப்படுத்தப்படாத காசோலைகள் வங்கியில் ஏற்றுக்கொள்ளப்படாமல் திருப்பி அனுப்பப்படும் (Returned).
பாசிட்டிவ் பே உறுதிப்படுத்துதலுக்குக் கீழ்க்கண்ட அடிப்படை விவரங்களைத் தெரிவிக்க வேண்டும்:
- கணக்கு எண் (Account Number)
- காசோலை எண் (Cheque Number)
- காசோலை தேதி (Cheque Date)
- தொகை (Amount)
- பணம் பெறுபவரின் பெயர் (Payee Name)
வாடிக்கையாளர்கள் தங்களின் காசோலை விவரங்களை வங்கிக்குத் தெரிவிக்கக் கீழ்க்காணும் வசதிகளைப் பயன்படுத்தலாம்:
- டி.எம்.பி (TMB) மொபைல் பேங்கிங் ஆப்
- இணைய வங்கிச் சேவை (Internet Banking)
- டி.எம்.பி டிஜிலாபி (TMB Digilobby)
- வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளம் (Web Portal)
- வங்கியின் கிளை அலுவலகக் கவுண்டர்கள்
விவரங்களைச் சமர்ப்பித்தவுடன், வாடிக்கையாளரின் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு உறுதிப்படுத்தப்பட்டதற்கான மின்னணு ஒப்புகைச் சீட்டு (e-acknowledgement) அனுப்பி வைக்கப்படும்.
இது தொடர்பான கூடுதல் விவரங்கள் அல்லது உதவிகளுக்கு வாடிக்கையாளர்கள் தங்களுக்கு அருகிலுள்ள வங்கி கிளையையோ அல்லது வங்கியின் வாடிக்கையாளர் சேவை மையத்தையோ +91 9842 461 461 என்ற எண்ணிலோ, அல்லது 180 0425 0426 என்ற தேசியக் கட்டணமில்லா எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.
காசோலை பரிவர்த்தனைகளைப் பாதுகாப்பான முறையில் மேற்கொள்வதற்கு வாடிக்கையாளர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என வங்கி நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலில் 8 கிலோ கஞ்சா பறிமுதல்: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!
ஞாயிறு 15, மார்ச் 2026 10:41:22 AM (IST)

பசுமை சாம்பியன் விருது, தலா ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசு: ஆட்சியர் அழகுமீனா வழங்கினார்
சனி 14, மார்ச் 2026 5:27:34 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு புதிய ரயில் சேவைகள், மாற்றங்கள்: பயணிகள் கோரிக்கை
வெள்ளி 13, மார்ச் 2026 5:27:51 PM (IST)

ஆர்ப்பாட்டத்தில் தனித்து நின்ற தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள்: நாகர்கோவிலில் சலசலப்பு!
வியாழன் 12, மார்ச் 2026 5:31:45 PM (IST)

வளைகுடா நாடுகளில் போர் பதற்றம்: தமிழக மீனவர்களை மீட்க விஜய் வசந்த் எம்.பி. மனு!
வியாழன் 12, மார்ச் 2026 12:27:28 PM (IST)

பள்ளி தாளாளரிடம் ரூ.10.5 கோடி நில மோசடி: தந்தை, மகன் மீது வழக்குப்பதிவு!
வியாழன் 12, மார்ச் 2026 8:33:05 AM (IST)


BabuMar 15, 2026 - 09:24:35 AM | Posted IP 172.7*****