» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

மாணவி கொலை: சிபிஐ விசாரணை கோரி குடியரசுத் தலைவருக்கு வழக்கறிஞர் கடிதம்!

சனி 14, மார்ச் 2026 4:35:26 PM (IST)

தூத்துக்குடி அருகே பிளஸ்-2 மாணவி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி, மத்திய அரசு கூடுதல் வழக்கறிஞர் ஏ. இசக்கிலட்சுமி குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக வழக்கறிஞர் ஏ. இசக்கிலட்சுமி குடியரசுத் தலைவர், தமிழக ஆளுநர் மற்றும் டிஜிபி ஆகியோருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். 

அதில், காணாமல் போன அன்றே (மார்ச் 10) காவல்துறை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தால் மாணவியின் உயிரைக் காப்பாற்றியிருக்க முடியும். 14 மணிநேரம் கழித்தே வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மாணவி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டாரா இல்லையா என்பதில் காவல்துறைக்கும் பொதுமக்களுக்கும் இடையே முரணான தகவல்கள் நிலவுகின்றன. இது வழக்கின் போக்கை மாற்றக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படாததாலும், உள்ளூர் காவல்துறையின் மீது நம்பிக்கை இல்லாததாலும், இவ்வழக்கை உடனடியாக சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும். தற்போது 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தாலும், நான்கு நாட்களாகியும் எவ்வித முன்னேற்றமும் இல்லை என பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். 

உண்மை குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரியும், காவல்துறையின் பாராமுகத்தைக் கண்டித்தும் தூத்துக்குடி - மதுரை நெடுஞ்சாலையில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இது போன்ற குற்றச் செயல்கள் தமிழகத்தில் நடைபெறாமல் இருக்க குற்றவாளிக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும், மாணவியின் மரண வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து

BabuMar 15, 2026 - 09:29:48 AM | Posted IP 172.7*****

vakkel nu solrenga ivanga anupuna yarukume cbi ku mathuru power irukutha?onnu cm mathanum ilaina court mathanum governor dgp president ithula yenna panna mudiyum ?yenaku therila therinjavanga solunag nala velai local vao thasildhr ku anupala ;? ivanga govt advocata irukangala?

இசக்கி லட்சுமிMar 14, 2026 - 05:31:22 PM | Posted IP 104.2*****

குற்றவாளி யாருன்னு நீ சொல்லும்மா தாயே சிபிஐ விசாரிச்சா 3 வருசம் ஆகும்

AI vs natureMar 14, 2026 - 05:29:41 PM | Posted IP 104.2*****

627006

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory