» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குடும்பத் தகராறால் பெண் தூக்கிட்டுத் தற்கொலை: தூத்துக்குடி அருகே சோகம்!

வியாழன் 12, மார்ச் 2026 8:16:14 AM (IST)

தூத்துக்குடி அருகே குடும்பத் தகராறால் மனமுடைந்த பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

தூத்துக்குடி முத்தையாபுரம் குமாரசாமி நகர் 3-வது தெருவைச் சேர்ந்தவர் பாக்கியராஜ். இவரது மனைவி செந்தூர்கனி (66). இவர்களது மகன் ஜேசுராஜ். கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜேசுராஜ் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனை அவரது மனைவி கண்டித்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் கோபித்துக்கொண்ட ஜேசுராஜின் மனைவி, தனது பெற்றோர் வீட்டிற்குச் சென்றுவிட்டார். மகன் மற்றும் மருமகளுக்கு இடையே ஏற்பட்ட இந்த தகராறால் மனவேதனையில் இருந்து வந்த செந்தூர்கனி நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து முத்தையாபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து

தமிழன்Mar 12, 2026 - 04:13:38 PM | Posted IP 162.1*****

காரணம் மது போதை , வாழ்க டாஸ்மாக் , வாழ்க திராவிடம் , வாழ்க திராவிட சாராய ஆலை குடும்பம்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory