» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
சட்டவிரோதமாக ரயில் முன்பதிவு டிக்கெட் விற்பனை : 5 ஆண்டுகளில் 26 பேர் கைது
செவ்வாய் 10, மார்ச் 2026 8:30:32 AM (IST)
குமரி மாவட்டத்தில் ஆன்லைன் மூலம் சட்டவிரோதமாக ரயில் முன்பதிவு டிக்கெட்டுகளை எடுத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததாகக் கடந்த 5 ஆண்டுகளில் 26 பேரை ரயில்வே பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.
ஐ.ஆர்.சி.டி.சி இணையதளத்தில் போலி கணக்குகளை உருவாக்கி, அதன் மூலம் டிக்கெட்டுகளை எடுத்து டிராவல் ஏஜென்சிகள் மற்றும் கணிணி மையங்கள் வாயிலாக முறைகேடாக விற்பனை செய்வது கண்டறியப்பட்டது. சமீபத்தில் நாகர்கோவில் பார்வதிபுரத்தில் உள்ள ஒரு டிராவல் ஏஜென்சியில் சோதனை நடத்திய அதிகாரிகள், போலி கணக்குகள் மூலம் மோசடியில் ஈடுபட்ட உரிமையாளர் ரமேஷ் என்பவரைக் கைது செய்தனர்.
கடந்த 2021 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில் மொத்தம் 26 பேர் இத்தகைய செயல்களுக்காகக் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 4 லட்சத்து 12 ஆயிரத்து 217 ரூபாய் மதிப்பிலான முன்பதிவு டிக்கெட்டுகள் மற்றும் 22 கணினிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. முறைகேடுகளைத் தடுக்க ரயில்வே பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆண்டுக்கு ரூ.6 கோடி வருவாய் தரும் இரணியல் ரயில் நிலையம் புறக்கணிப்பு: பயணிகள் கொதிப்பு!
திங்கள் 15, ஜூன் 2026 4:49:49 PM (IST)

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் பச்சைமால், பாஜக விஜயதரணி த.வெ.க.வில் ஐக்கியம்!
ஞாயிறு 14, ஜூன் 2026 8:59:11 AM (IST)

திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸை கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும்: பயணிகள் சங்கம் வலியுறுத்தல்!
சனி 13, ஜூன் 2026 12:41:39 PM (IST)

தவெகவில் இணையும் விஜயதாரணி: பனையூர் அலுவலகத்தில் குவிந்த முக்கியப் புள்ளிகள்!
சனி 13, ஜூன் 2026 11:21:58 AM (IST)

ஆசாரிபள்ளம் மருத்துவமனை சாலையில் ஆபத்தான பள்ளம்: போக்குவரத்து கடுமையாகப் பாதிப்பு!
வெள்ளி 12, ஜூன் 2026 12:36:58 PM (IST)

இரட்டைக்கரை கால்வாயில் ஆட்சியர் பிரதாப் ஆய்வு: ஆக்கிரமிப்புகளைத் தடுத்துக் கண்காணிக்க உத்தரவு!
வெள்ளி 12, ஜூன் 2026 11:18:08 AM (IST)


