» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
சட்டவிரோதமாக ரயில் முன்பதிவு டிக்கெட் விற்பனை : 5 ஆண்டுகளில் 26 பேர் கைது
செவ்வாய் 10, மார்ச் 2026 8:30:32 AM (IST)
குமரி மாவட்டத்தில் ஆன்லைன் மூலம் சட்டவிரோதமாக ரயில் முன்பதிவு டிக்கெட்டுகளை எடுத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததாகக் கடந்த 5 ஆண்டுகளில் 26 பேரை ரயில்வே பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.
ஐ.ஆர்.சி.டி.சி இணையதளத்தில் போலி கணக்குகளை உருவாக்கி, அதன் மூலம் டிக்கெட்டுகளை எடுத்து டிராவல் ஏஜென்சிகள் மற்றும் கணிணி மையங்கள் வாயிலாக முறைகேடாக விற்பனை செய்வது கண்டறியப்பட்டது. சமீபத்தில் நாகர்கோவில் பார்வதிபுரத்தில் உள்ள ஒரு டிராவல் ஏஜென்சியில் சோதனை நடத்திய அதிகாரிகள், போலி கணக்குகள் மூலம் மோசடியில் ஈடுபட்ட உரிமையாளர் ரமேஷ் என்பவரைக் கைது செய்தனர்.
கடந்த 2021 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில் மொத்தம் 26 பேர் இத்தகைய செயல்களுக்காகக் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 4 லட்சத்து 12 ஆயிரத்து 217 ரூபாய் மதிப்பிலான முன்பதிவு டிக்கெட்டுகள் மற்றும் 22 கணினிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. முறைகேடுகளைத் தடுக்க ரயில்வே பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தேர்தல் கட்டுப்பாட்டு அறை தொடர்ந்து செயல்படும் - ஆட்சியர் ஆர்.அழகுமீனா தகவல்
புதன் 29, ஏப்ரல் 2026 5:40:23 PM (IST)

கள்ளக்காதலை எதிர்த்தவர் கொலை: வாலிபருக்கு ஆயுள் தண்டனை - பத்மநாபபுரம் நீதிமன்றம் தீர்ப்பு
புதன் 29, ஏப்ரல் 2026 5:00:02 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் மே 1ஆம் தேதி மதுக்கடைகள் மூடல் - ஆட்சியர் உத்தரவு
புதன் 29, ஏப்ரல் 2026 3:54:51 PM (IST)

சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் – ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!
திங்கள் 27, ஏப்ரல் 2026 9:20:33 AM (IST)

செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் பல லட்சம் மோசடி?அஞ்சல்துறை அதிகாரிகள் விசாரணை
சனி 25, ஏப்ரல் 2026 4:04:55 PM (IST)

செங்கோட்டை, குமரி ரயில் சேவையில் மாற்றம்: பாலக்காடு ரயில் சேவை பகுதியாக ரத்து!
சனி 25, ஏப்ரல் 2026 10:36:04 AM (IST)


