» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
குமரியில் சுற்றுலாப் பயணிகளுக்கு வழிகாட்டும் ஏஐ இயந்திரம்: எஸ்பி துவக்கி வைத்தார்!
செவ்வாய் 9, டிசம்பர் 2025 10:59:24 AM (IST)
கன்னியாகுமரியில் 85 சிசிடிவி கேமரா வசதி, சுற்றுலாப் பயணிகளுக்கு வழிகாட்டும் ஏஐ இயந்திரம் ஆகியவற்றை எஸ்பி ஆா். ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள நவீன புறக்காவல் நிலையம், 85 சிசிடிவி கேமரா வசதி, ஏஐ இயந்திரம் ஆகியவற்றின் திறப்பு விழா நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆா். ஸ்டாலின் தொடங்கி வைத்தாா். கன்னியாகுமரி டி.எஸ்.பி. ஜெயச்சந்திரன், காவல் ஆய்வாளா்கள் சுந்தர்ராஜ் பெருமாள், அருண் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
நவீன ஏஐ இயந்திரத்தின் மூலம் தமிழ், ஆங்கிலம், மலையாளம், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் சுற்றுலாப் பயணிகள் தகவல்களை பெறுவதும், அவசர சேவைகளை பயன்படுத்துவதும் சாத்தியமாகும். உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும், இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும் வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இது பெரிய உதவியாக இருக்கும்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சொத்தவிளை கடற்கரையில் கடல் உள்வாங்கியது!
புதன் 28, ஜனவரி 2026 5:55:38 PM (IST)

மடிக்கணினிகளை 2 தினங்களில் பெற்றுக்கொள்ள வேண்டும்: ஆட்சியர் அழகுமீனா அறிவுறுத்தல்
புதன் 28, ஜனவரி 2026 5:41:21 PM (IST)

வெறிப்பிடித்த தெரு நாய் கடிதத்தில் 3 குழந்தைகள் உள்பட பலர் காயம் - மருத்துவமனையில் அனுமதி!
புதன் 28, ஜனவரி 2026 10:47:30 AM (IST)

இதுவரை 1,06,000 குடும்ப அட்டைதாரர்களுக்கு உங்க கனவ சொல்லுங்க அட்டை : ஆட்சியர்..!
செவ்வாய் 27, ஜனவரி 2026 5:08:31 PM (IST)

கன்னியாகுமரியில் 77-வது குடியரசு தினவிழா: ஆட்சியர் அழகுமீனா தேசியக்கொடி ஏற்றினார்!
திங்கள் 26, ஜனவரி 2026 12:43:43 PM (IST)

பெண் வெளியிட்ட வீடியோ எதிரொலி: சுசீந்திரம் கோவிலில் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்ல தடை!
ஞாயிறு 25, ஜனவரி 2026 1:50:08 PM (IST)

