» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
குமரி கடலில் சாக்கடை கலப்பதை தடுத்து நிறுத்த வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டம்
புதன் 21, மே 2025 4:43:23 PM (IST)

சர்வதேச சுற்றுலா நகரமான கன்னியாகுமரி கடலில் சாக்கடை கலப்பதை தடுத்து நிறுத்த வலியுறுத்தி பொதுமக்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சர்வதேச சுற்றுலா நகரமான கன்னியாகுமரியில் உள்ள கடலில் சமீப காலமாக சாக்கடை நீர் கலப்பதால் சுற்றுச்சூழல் கடுமையாக மாசடைந்து வருகிறது. இதனால்பொது மக்கள், மீனவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். சுமார் 25,000 பேர் வசிக்கும் இந்த பகுதியில் வீடுகள், கடைகள், நிறுவனங்கள் உள்ளிட்ட வைகளில் இருந்து வெளி யேறும் சாக்கடை நீர் எந்தவித சுத்திகரிப்பும் இல்லாமல் நேரடியாக கடலில் கலக்கிறது.
இந்த சாக்கடையுடன் மனித கழிவுகளும் கலந்து கடலை மாசுபடுத்தி வருவதாக அப்பகுதி மக்கள் புகார். கடலில் கலக்கும் சாக்கடை நீரால் மக்கள் பல்வேறு நோய் தொற்றுக்கு உள்ளாகி வருவதால் உடனடியாக கழிவுகள் கடலில் கலப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சுற்றுலா திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா அழைப்பு!
புதன் 9, ஜூலை 2025 5:19:37 PM (IST)

கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் கூடுதல் கட்டிடப் பணிகள்: அமைச்சர் அடிக்கல் நாட்டினார்!
புதன் 9, ஜூலை 2025 4:08:01 PM (IST)

எல்லோருக்கும் எல்லாம் என்ற உயரிய நோக்கில் அரசு செயல்படுகிறது: அமைச்சர் மனோ தங்கராஜ்
செவ்வாய் 8, ஜூலை 2025 4:56:47 PM (IST)

தக்கலை குறுவட்ட வருவாய் ஆய்வாளர் அலுவலகம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!
திங்கள் 7, ஜூலை 2025 4:29:34 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் புதிய பேருந்து சேவை : அமைச்சர் மனோ தங்கராஜ் துவக்கி வைத்தார்
ஞாயிறு 6, ஜூலை 2025 10:46:20 AM (IST)

பிரசவித்த பின் குழந்தைகளின் செவித்திறன்களை நன்கு ஆராய வேண்டும்: ஆட்சியர் வேண்டுகோள்
சனி 5, ஜூலை 2025 12:41:12 PM (IST)
