» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
குமரி மாவட்டத்தில் 8 நாட்களில் 10 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு!!
புதன் 9, ஜூலை 2025 8:26:11 PM (IST)
குமரி மாவட்டத்தில் 8 நாட்களில் 10 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பரவலை கட்டுப்படுத்த சுகாதாரத்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
குமரி மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதம் முதல் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. தற்போதும் விட்டு, விட்டு மழை பெய்கிறது. இந்த மழையினால் பலருக்கு காய்ச்சல், ஜலதோஷம், வைரஸ் காய்ச்சல் போன்ற மழைக்கால நோய்கள் பரவி வருகின்றன. இவ்வாறு காய்ச்சலுடன் மருத்துவமனைகளுக்கு செல்பவர்களுக்கு ரத்த பரிசோதனை செய்யும் போது, சிலருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் குமரி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவல் மெல்ல, மெல்ல அதிகரித்து வருகிறது.
மழை பெய்யும்போது டெங்கு கொசுக்கள் உற்பத்தி அதிகரிப்பதால் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிக்கிறது. கடந்த மாதத்தில் பலர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 1-ந் தேதி முதல் நேற்று வரையிலான 8 நாட்களில் 10 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகிறார்கள். இதனால் டெங்கு கொசு ஒழிப்பு பணியில் உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள கொசு ஒழிப்பு பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
இதுதொடர்பாக மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் பிரபாகரனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது: தற்போது குமரி மாவட்டத்தில் தென்மேற்குப் பருவமழை விட்டு, விட்டு பெய்து வருவதால் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. நாள் ஒன்றுக்கு ஒன்று அல்லது இரண்டு பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது ரத்த பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
எனவே டெங்கு காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்த மாவட்டம் முழுவதும் டெங்கு கொசு ஒழிப்பு பணியில் பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள், பஞ்சாயத்து பகுதிகள் அனைத்திலும் கொசு ஒழிப்பு பணியாளர்களும், சுகாதார பணியாளர்களும் இணைந்து கொசு ஒழிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

விரிகோடு ரயில்வே கேட் வழியாக மேம்பாலம் அமைக்கப்படும்: விஜய் வசந்த் எம்.பி. உறுதி!!
புதன் 9, ஜூலை 2025 8:22:21 PM (IST)

பிளஸ்-2 மாணவி பலாத்காரம்: ஏற்கனவே திருமணமான வாலிபர் மீது போக்சோ வழக்கு
புதன் 9, ஜூலை 2025 8:19:31 PM (IST)

சுற்றுலா திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா அழைப்பு!
புதன் 9, ஜூலை 2025 5:19:37 PM (IST)

கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் கூடுதல் கட்டிடப் பணிகள்: அமைச்சர் அடிக்கல் நாட்டினார்!
புதன் 9, ஜூலை 2025 4:08:01 PM (IST)

எல்லோருக்கும் எல்லாம் என்ற உயரிய நோக்கில் அரசு செயல்படுகிறது: அமைச்சர் மனோ தங்கராஜ்
செவ்வாய் 8, ஜூலை 2025 4:56:47 PM (IST)

தக்கலை குறுவட்ட வருவாய் ஆய்வாளர் அலுவலகம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!
திங்கள் 7, ஜூலை 2025 4:29:34 PM (IST)
