» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
கன்னியாகுமரியில் 18ஆம் தேதி கல்விக் கடன் மேளா: ஆட்சியர் தகவல்
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 3:48:43 PM (IST)
குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் வருகிற 18ஆம் தேதி கருங்கல் பெத்லஹேம் பொறியியல் கல்லூரியில் கல்விக் கடன் மேளா நடைபெற உள்ளது.
கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி இணைந்து நடத்தும் இரண்டாவது கல்விக் கடன் மேளா வருகிற 18.09.2025 அன்று கருங்கல் பெத்லஹேம் பொறியியல் கல்லூரியில் வைத்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் காலை 10 மணிக்கு தொடங்கி வைக்கப்பட உள்ளது. மேற்படி முகாமில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி, கனரா வங்கி, கூட்டுறவு வங்கி மற்றும் தனியார் வங்கிகளும் பங்கேற்கின்றன.
கல்விக்கு பணம் ஒரு தடையாக இருக்கக்கூடாது என்பதற்காக சிறப்புக் கல்விக்கடன் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. முதலாவது கல்விக் கடன் மேளா கோணம் அரசு பொறியியல் கல்லூரியில் செப்டம்பர் 10 ம் தேதி அன்று நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக வருகிற 18.09.2025 அன்று கருங்கல் பெத்லஹேம் பொறியியல் கல்லூரியிலும், 25.09.2025 அன்று மார்த்தாண்டம் நேசமணி நினைவு கிறிஸ்தவ கல்லூரியிலும், 10.10.2025 அன்று சுங்கான்கடை புனித சேவியர் பொறியியல் கல்லூரியிலும் நடைபெற உள்ளது. மேற்படி கல்விக்கடன் முகாம்களில் மாணவர்கள் கலந்து கொண்டு கல்விக்கடன் விண்ணப்பம் செய்வதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது. https://pmvidyalakshmi.co.in பி.எம் வித்யாலட்சுமி போர்டல் மூலம் கல்விக்கடன் பெற விண்ணப்பிக்கவும்.
மேலும் கல்விக் கடன் பெற கல்லூரி சேர்க்கைக்கான சான்று, கல்விக் கட்டண விவரங்கள், 10, 12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள், சாதி சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் பெற்றோர்களுடைய பான் கார்டு, ஆதார் அட்டை உள்ளிட்ட தேவையான அனைத்து ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். மாவட்ட ஆட்சித்தலைவர் வளாகத்தில் செயல்பட்டு வரும் உதவி மையத்தில் கல்விக்கடன் குறித்து விண்ணப்பம் செய்வதில் ஏற்படும் சந்தேகங்களை 9944445202 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விளக்கம் பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குமரி மாவட்டத்தில் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.77.27 கோடி கடனுதவி: ஆட்சியர் வழங்கினார்!
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 5:17:29 PM (IST)

ஆயுத பூஜை, தீபாவளி: சென்னை - நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்!!
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 3:56:34 PM (IST)

திங்கள்சந்தை- புதுக்கடை சாலையில் பாலம் பணி: 10 நாட்களுக்கு குடிநீர் வினியோகம் ரத்து!
திங்கள் 15, செப்டம்பர் 2025 5:00:08 PM (IST)

கள்ளக்காதலில் பிறந்த குழந்தையை கொன்று குளத்தில் வீசிய கொடூரம்: இளம்பெண் கைது!
திங்கள் 15, செப்டம்பர் 2025 12:53:57 PM (IST)

தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்: கனிமொழி தலைமையில் உறுதிமொழி ஏற்பு
திங்கள் 15, செப்டம்பர் 2025 12:48:00 PM (IST)

மைசூர் - திருநெல்வேலி சிறப்பு ரயிலை கன்னியாகுமரியிலிருந்து இயக்க கோரிக்கை!
திங்கள் 15, செப்டம்பர் 2025 10:12:10 AM (IST)
