» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
குமரியில் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி கடல் பாறைகளில் தடுப்பு வேலி அமைப்பு
செவ்வாய் 16, டிசம்பர் 2025 5:03:31 PM (IST)

கன்னியாகுமரியில் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி கடல் பாறைகளில் தடுப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் ஆர். ஸ்டாலின், உத்தரவின்படி, பொதுமக்களின் பாதுகாப்பை முன்னிட்டு, கடல் பாறைகள் உள்ள அபாயகரமான பகுதிகளில் பொதுமக்கள் செல்லாதவாறு தடுப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது.
கடல் அலைகள் மற்றும் பாறை பகுதிகளால் ஏற்படும் விபத்துகளைத் தடுக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையால், பொதுமக்கள் பாதுகாப்பு மேலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, பொதுமக்களும் காவல் துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி, தங்களது பாதுகாப்பை தாங்களே உறுதிசெய்துகொள்ள வேண்டும் என காவல் துறை கேட்டுக்கொண்டுள்ளது. மாவட்ட காவல் துறையின் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு பெரும்பாலான பொதுமக்கள் பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துவருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இரட்டைக் கொலை வழக்கில் குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை: மகிளா நீதிமன்றம் தீர்ப்பு!
சனி 11, ஏப்ரல் 2026 5:05:18 PM (IST)

கேரளாவிற்கு கனிமங்கள் கொண்டு செல்லத் தடை: விபத்துக்கள் அதிகரிப்பால் ஆட்சியர் அதிரடி உத்தரவு!
சனி 11, ஏப்ரல் 2026 10:15:37 AM (IST)

தேர்தல் விதிமீறல்களை உடனுக்குடன் தெரிவிக்க உத்தரவு: நுண் பார்வையாளர்களுக்குத் பயிற்சி!
வெள்ளி 10, ஏப்ரல் 2026 3:13:27 PM (IST)

நள்ளிரவில் காய்கறி வியாபாரியின் ஆட்டோ எரிந்து சேதம் - போலீஸ் விசாரணை!
வெள்ளி 10, ஏப்ரல் 2026 11:25:27 AM (IST)

பைக் மீது கனிமவள லாரி மோதி விபத்து : தந்தை கண்முன்னே மகள் பலி!
வெள்ளி 10, ஏப்ரல் 2026 10:45:04 AM (IST)

நாகர்கோவிலில் ஏப். 15-ல் பிரதமர் மோடி ரோடு ஷோ: நயினார் நாகேந்திரன் தகவல்
வியாழன் 9, ஏப்ரல் 2026 5:32:57 PM (IST)

