» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குமரியில் ஏப்ரல் 12-ல் விஜய் தேர்தல் பிரச்சாரம்: தவெக தொண்டர்கள் உற்சாகம்!

வியாழன் 9, ஏப்ரல் 2026 5:29:22 PM (IST)



தமிழகச் சட்டமன்றப் பொதுத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் கன்னியாகுமரி மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, அக்கட்சியின் தலைவர் விஜய் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 12) பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட நாகர்கோவில், கன்னியாகுமரி, குளச்சல், பத்மநாபபுரம், கிள்ளியூர் மற்றும் விளவங்கோடு ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகளில் தவெக சார்பில் வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். இவர்களை அறிமுகம் செய்து வைத்து, வாக்கு சேகரிப்பதற்காக அன்று மாலை அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி மைதானத்தில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

இந்தத் தேர்தல் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றும் விஜய், தனது கட்சியின் தேர்தல் நிலைப்பாடுகள் மற்றும் தொகுதி மேம்பாட்டிற்கான திட்டங்கள் குறித்துப் பேசவுள்ளார். அவரது வருகையை முன்னிட்டு, பொதுக்கூட்டத்திற்கான பாதுகாப்பு மற்றும் அனுமதி கோரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் தவெக நிர்வாகிகள் முறைப்படி விண்ணப்பித்துள்ளனர்.

கட்சியின் தலைவராக விஜய் முதன்முறையாகத் தேர்தல் களத்தில் நேரடியாகப் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதால், தவெக தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகம் ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் இக்கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory