» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
கல்வியின் அவசியத்தை எடுத்துரைத்த எஸ்.பி. ஸ்டாலினின் நிமிர் குழு.
செவ்வாய் 16, டிசம்பர் 2025 5:00:16 PM (IST)

கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி. ஸ்டாலினின் நிமிர் குழு, மலைவாழ் பகுதியில் வசிக்கும் மாணவிகளுக்கும், பெற்றோருக்கும் கல்வியின் அவசியத்தை எடுத்துரைத்தனர்.
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களால் நிமிர் குழு தொடங்கி வைக்கப்பட்டு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. மதியழகன் அவர்கள் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர் தலைமையில் ஐந்து உட்கோட்டத்திற்கும் பெண் போலீசார் நான்கு மற்றும் இருசக்கர வாகனத்துடன் நியமிக்கப்பட்டுள்ளனர்
கன்னியாக்குமரி மாவட்டம் பேச்சிப்பாறை உண்டு உறைவிட அரசு மேல்நிலைப்பள்ளி -மலைவாழ் பகுதியிலிருந்து பயிலும் 11ஆம் வகுப்பு மற்றும் 10ஆம் வகுப்பு மாணவிகள் நீண்ட நாட்களாக பள்ளிக்கு வராமலும், அரையாண்டு தேர்வு எழுதாமலும் இருந்துள்ளனர்.இந்த தகவலை அறிந்த, நிமிர் (The Rising Team) குழுவின் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் சரோஜா, கலா மற்றும் தலைமை காவலர் பிஸ்மா ஆகியோர்...
பள்ளிக்கு செல்லாத மாணவிகளின் வீட்டிற்கே சென்று மாணவிகளிடம் கல்வி கற்கும் அவசியத்தை எடுத்துரைத்தும், பள்ளிக்கு செல்லாத மாணவர்கள் பிற்காலத்தில் படும் துயரத்தை விளக்கி, அவர்களின் பெற்றோரிடம் மாணவியின் எதிர்காலம் சிறப்பாக அமைய கல்வி ஒன்றே தீர்வு என அழகியமுறையில் அறிவுரை கூறியும்அவர்களின் நிறைகுறைகளை விசாரித்து மாணவிகளை அழைத்துக்கொண்டு பள்ளியில் மீண்டும் சேர்த்தனர். இடைநிற்றல் இல்லாமல் மாணவிகளை தொடர்ந்து பள்ளிக்கு வர செய்து உதவி செய்த நிமிர் குழுவினருக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கும் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் நன்றி கூறினார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பிரதமர் மோடி வருகை: கன்னியாகுமரிக்கு தினசரி இரயில்கள் கிடைக்குமா? – பயணிகள் எதிர்பார்ப்பு!
வெள்ளி 20, பிப்ரவரி 2026 8:10:46 PM (IST)

அமிர்த் பாரத் கால அட்டவணையை மாற்றக் கோரிக்கை: நள்ளிரவில் சேருவதால் ரயில் பயணிகள் அவதி
வியாழன் 19, பிப்ரவரி 2026 8:02:34 PM (IST)

சீசன் காலத்தில் ஏமாற்றிய கேரை மீன்கள்: சூறைக் காற்றால் பாதியிலேயே கரை திரும்பிய மீனவர்கள்!
வியாழன் 19, பிப்ரவரி 2026 5:10:51 PM (IST)

விபத்தில் மூளைச்சாவு அடைந்த புதுமாப்பிள்ளை: உடல் உறுப்புகள் தானம் மூலம் 6 பேருக்கு மறுவாழ்வு
வியாழன் 19, பிப்ரவரி 2026 8:41:44 AM (IST)

துபாயில் வேலை என ஆசை காட்டி ரூ.1.5 கோடி மோசடி செய்தவர் 24 மணி நேரத்தில் கைது!
புதன் 18, பிப்ரவரி 2026 4:55:56 PM (IST)

மருத்துவ மேல்படிப்புக்கு சீட் வாங்கித் தருவதாக ரூ.18 லட்சம் மோசடி: தம்பதி உட்பட 3 பேர் மீது வழக்கு!
புதன் 18, பிப்ரவரி 2026 8:41:13 AM (IST)

