» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
பிரதமர் மோடி வருகை: கன்னியாகுமரிக்கு தினசரி இரயில்கள் கிடைக்குமா? – பயணிகள் எதிர்பார்ப்பு!
வெள்ளி 20, பிப்ரவரி 2026 8:10:46 PM (IST)

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி விரைவில் தமிழகம் வரவுள்ள நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தின் நீண்டகால இரயில்வே கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என கன்னியாகுமரி மாவட்ட இரயில் பயணிகள் சங்கம் (KKDRUA) கோரிக்கை விடுத்துள்ளது.
30 ஆண்டுகால ஐதராபாத் இரயில் கோரிக்கை: கன்னியாகுமரியிலிருந்து ஐதராபாத்திற்கு நேரடி இரயில் இயக்க வேண்டும் என்பது 30 ஆண்டுகால கோரிக்கையாகும். தாம்பரத்திலிருந்து ஐதராபாத் செல்லும் சார்மினார் எக்ஸ்பிரஸ் இரயிலை கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும் அல்லது மாற்றாக காச்சிகுடா-எலஹங்கா இரயிலை மதுரை, நெல்லை வழியாக குமரிக்கு நீட்டிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேற்கு கடற்கரை மற்றும் ஆன்மீக சுற்றுலா இணைப்பு: ஆன்மீகத் தலமான கன்னியாகுமரிக்கு மங்களூர், கோவா போன்ற பகுதிகளிலிருந்து வரும் பயணிகளின் வசதிக்காக, தற்போது திருவனந்தபுரம் வரை வரும் மங்களூர் எக்ஸ்பிரஸ் (16347/16348) இரயிலை நாகர்கோவில் அல்லது கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும். இது மூகாம்பிகை மற்றும் உடுப்பி செல்லும் பக்தர்களுக்கும் பயனுள்ளதாக அமையும்.
தலைநகர் சென்னையுடன் கூடுதல் இணைப்பு: சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரை இரட்டைப் பாதை பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், கீழ்க்கண்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன:
டெல்லியிலிருந்து சென்னை வரும் கிராண்ட் டிரங்க் (GT) எக்ஸ்பிரஸ் இரயிலை கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும்.
நாகர்கோவில்-தாம்பரம் வாரமிருமுறை இரயிலை தினசரி இரயிலாக மாற்ற வேண்டும்.
மதுரை, சேலம் வழியாக சென்னை சென்ட்ரலுக்கு புதிய தினசரி அதிவேக இரயில் இயக்கப்பட வேண்டும்.
உள்ளூர் பயணிகள் வசதி:
திருவனந்தபுரம் - நாகர்கோவில் பயணிகள் இரயிலை திருநெல்வேலி வரை நீட்டிக்க வேண்டும்.
புனலூர் - மதுரை இரயிலை தஞ்சாவூர் வழியாக திருநள்ளாறு வரை நீட்டிக்க வேண்டும்.
நாகர்கோவில் - கோட்டயம் இரயிலை பட்டுக்கோட்டை வழியாக திருவாரூர் வரை நீட்டிக்க வேண்டும்.
எதிர்பார்ப்பு: தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், பிரதமரின் இந்த வருகை மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்திய வரைபடத்தில் கன்னியாகுமரிக்கு எப்போதும் முன்னுரிமை அளிக்கும் பிரதமர், இந்த முறை குமரி மாவட்ட மக்களின் இந்த நியாயமான இரயில்வே கோரிக்கைகளை நிறைவேற்றுவார் என பயணிகள் சங்கத் தலைவர் எஸ்.ஆர். ஸ்ரீராம் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றிட வேண்டும் - ஆட்சியர் ஆர்.அழகுமீனா
வியாழன் 21, மே 2026 3:53:43 PM (IST)

10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் கன்னியாகுமரி மாவட்டம் மாநில அளவில் 5-ஆவது இடம்: ஆட்சியர் பாராட்டு!
வியாழன் 21, மே 2026 11:43:18 AM (IST)

குமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசிப் பெருந்திருவிழா நாளை கொடியேற்றம்!
புதன் 20, மே 2026 3:27:05 PM (IST)

மகளிர் ஐடிஐ-யில் மாணவியர் சேர்க்கை தொடக்கம்: ஆண்லைனில் விண்ணப்பிக்கலாம்!
புதன் 20, மே 2026 10:14:49 AM (IST)

கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்ட 2 குழந்தைகள்: உயிர்காத்த தீயணைப்பு வீரருக்கு பாராட்டு மழை!
புதன் 20, மே 2026 8:37:00 AM (IST)

சொட்டு நீர் பாசனத்திற்கு 100 சதவீதம் மானியம் : விவசாயிகள் பயன்பெற ஆட்சியர் அழைப்பு!
செவ்வாய் 19, மே 2026 3:53:35 PM (IST)


