» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
விபத்தில் மூளைச்சாவு அடைந்த புதுமாப்பிள்ளை: உடல் உறுப்புகள் தானம் மூலம் 6 பேருக்கு மறுவாழ்வு
வியாழன் 19, பிப்ரவரி 2026 8:41:44 AM (IST)

விபத்தில் மூளைச்சாவு அடைந்த 23 வயது இளைஞரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதன் மூலம் 6 பேருக்குப் புதிய வாழ்வு கிடைத்துள்ளது.
நெல்லை மாவட்டம் ஆவரைகுளம் அருகே உள்ள சவுந்தரலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த தொழிலாளி மகேஷ் (23). இவர் சில மாதங்களுக்கு முன்பு காதலித்துத் திருமணம் செய்தவர். கடந்த 16-ந் தேதி மோட்டார் சைக்கிளில் சென்றபோது, காவல்கிணறு ரயில்வே மேம்பாலத்தில் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரில் மோதி பலத்த காயமடைந்தார்.
நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் மூளைச்சாவு அடைந்ததாக டாக்டர்கள் அறிவித்தனர். "மண்ணோடு மண்ணாக விரும்புவில்லை, அவர் உறுப்புகள் மூலம் பிறர் வாழட்டும்" என்ற குடும்பத்தினரின் சம்மதத்துடன் கல்லீரல், 2 சிறுநீரகங்கள், 2 கருவிழிகள் மற்றும் தோல் ஆகியவை தானமாகப் பெறப்பட்டன. இவை திருச்சி, காரைக்குடி, மதுரை மற்றும் நாகர்கோவில் மருத்துவமனைகளுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டு 6 பேருக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றிட வேண்டும் - ஆட்சியர் ஆர்.அழகுமீனா
வியாழன் 21, மே 2026 3:53:43 PM (IST)

10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் கன்னியாகுமரி மாவட்டம் மாநில அளவில் 5-ஆவது இடம்: ஆட்சியர் பாராட்டு!
வியாழன் 21, மே 2026 11:43:18 AM (IST)

குமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசிப் பெருந்திருவிழா நாளை கொடியேற்றம்!
புதன் 20, மே 2026 3:27:05 PM (IST)

மகளிர் ஐடிஐ-யில் மாணவியர் சேர்க்கை தொடக்கம்: ஆண்லைனில் விண்ணப்பிக்கலாம்!
புதன் 20, மே 2026 10:14:49 AM (IST)

கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்ட 2 குழந்தைகள்: உயிர்காத்த தீயணைப்பு வீரருக்கு பாராட்டு மழை!
புதன் 20, மே 2026 8:37:00 AM (IST)

சொட்டு நீர் பாசனத்திற்கு 100 சதவீதம் மானியம் : விவசாயிகள் பயன்பெற ஆட்சியர் அழைப்பு!
செவ்வாய் 19, மே 2026 3:53:35 PM (IST)


