» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
சீசன் காலத்தில் ஏமாற்றிய கேரை மீன்கள்: சூறைக் காற்றால் பாதியிலேயே கரை திரும்பிய மீனவர்கள்!
வியாழன் 19, பிப்ரவரி 2026 5:10:51 PM (IST)

குளச்சல் ஆழ்கடல் பகுதியில் வீசி வரும் பலத்த சூறைக்காற்று காரணமாக, மீன்பிடித் தொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கேரை மீன் சீசன் காலத்திலும் போதிய வருமானம் கிடைக்காததால் மீனவர்கள் பெரும் நஷ்டத்தைச் சந்தித்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் மீன்பிடித் துறைமுகத்தைச் சார்ந்த 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் 1000-க்கும் அதிகமான வள்ளங்கள் ஆழ்கடல் மீன்பிடிப்பை நம்பியுள்ளன. வழக்கமாக 10 நாட்கள் தங்கி மீன்பிடிக்கும் விசைப்படகுகள், பலத்த காற்று காரணமாகப் பாதியிலேயே கரை திரும்ப வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
தற்போது கேரை மீன்களுக்கான சீசன் என்றாலும், நேற்று கரை திரும்பிய சில படகுகளில் மிகக் குறைந்த அளவே மீன்கள் கிடைத்தன. கிடைத்த சொற்ப மீன்களை விற்றால், படகிற்குச் செலவு செய்த டீசல் காசு கூடக் கிடைக்கவில்லை" என மீனவர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். தொடர்ந்து நிலவும் சீரற்ற வானிலையால் குளச்சல் துறைமுகப் பகுதியில் மீன்பிடி வர்த்தகம் தற்போது மந்தமான நிலையை எட்டியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றிட வேண்டும் - ஆட்சியர் ஆர்.அழகுமீனா
வியாழன் 21, மே 2026 3:53:43 PM (IST)

10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் கன்னியாகுமரி மாவட்டம் மாநில அளவில் 5-ஆவது இடம்: ஆட்சியர் பாராட்டு!
வியாழன் 21, மே 2026 11:43:18 AM (IST)

குமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசிப் பெருந்திருவிழா நாளை கொடியேற்றம்!
புதன் 20, மே 2026 3:27:05 PM (IST)

மகளிர் ஐடிஐ-யில் மாணவியர் சேர்க்கை தொடக்கம்: ஆண்லைனில் விண்ணப்பிக்கலாம்!
புதன் 20, மே 2026 10:14:49 AM (IST)

கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்ட 2 குழந்தைகள்: உயிர்காத்த தீயணைப்பு வீரருக்கு பாராட்டு மழை!
புதன் 20, மே 2026 8:37:00 AM (IST)

சொட்டு நீர் பாசனத்திற்கு 100 சதவீதம் மானியம் : விவசாயிகள் பயன்பெற ஆட்சியர் அழைப்பு!
செவ்வாய் 19, மே 2026 3:53:35 PM (IST)



முன்னாள் மீனவன்Feb 19, 2026 - 07:12:35 PM | Posted IP 162.1*****