» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
சீசன் காலத்தில் ஏமாற்றிய கேரை மீன்கள்: சூறைக் காற்றால் பாதியிலேயே கரை திரும்பிய மீனவர்கள்!
வியாழன் 19, பிப்ரவரி 2026 5:10:51 PM (IST)

குளச்சல் ஆழ்கடல் பகுதியில் வீசி வரும் பலத்த சூறைக்காற்று காரணமாக, மீன்பிடித் தொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கேரை மீன் சீசன் காலத்திலும் போதிய வருமானம் கிடைக்காததால் மீனவர்கள் பெரும் நஷ்டத்தைச் சந்தித்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் மீன்பிடித் துறைமுகத்தைச் சார்ந்த 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் 1000-க்கும் அதிகமான வள்ளங்கள் ஆழ்கடல் மீன்பிடிப்பை நம்பியுள்ளன. வழக்கமாக 10 நாட்கள் தங்கி மீன்பிடிக்கும் விசைப்படகுகள், பலத்த காற்று காரணமாகப் பாதியிலேயே கரை திரும்ப வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
தற்போது கேரை மீன்களுக்கான சீசன் என்றாலும், நேற்று கரை திரும்பிய சில படகுகளில் மிகக் குறைந்த அளவே மீன்கள் கிடைத்தன. கிடைத்த சொற்ப மீன்களை விற்றால், படகிற்குச் செலவு செய்த டீசல் காசு கூடக் கிடைக்கவில்லை" என மீனவர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். தொடர்ந்து நிலவும் சீரற்ற வானிலையால் குளச்சல் துறைமுகப் பகுதியில் மீன்பிடி வர்த்தகம் தற்போது மந்தமான நிலையை எட்டியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குமரி மாவட்ட சுற்றுலாத்தலங்களை மேம்படுத்த நடவடிக்கை: அமைச்சர் ராஜேஷ் குமார் ஆய்வு
சனி 11, ஜூலை 2026 5:03:29 PM (IST)

மது போதையில் சாலையில் கிடந்த இளம்பெண், வாலிபர் : போலீசார் விசாரணை!
சனி 11, ஜூலை 2026 3:35:23 PM (IST)

கிராமப்புற விளையாட்டு வீரர்களை உருவாக்க நடவடிக்கை: மினி மைதானப் பணிகளை ஆட்சியர் ஆய்வு!
சனி 11, ஜூலை 2026 12:44:31 PM (IST)

இரயில் நிலையங்களில் ₹10 கட்டணத்தில் பேட்டரி கார் வசதி: கோட்ட மேலாளருக்கு கோரிக்கை!
புதன் 8, ஜூலை 2026 4:33:40 PM (IST)

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை - விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு
செவ்வாய் 7, ஜூலை 2026 4:43:28 PM (IST)

மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் செ.ராஜேஷ் குமார் ஆய்வு
செவ்வாய் 7, ஜூலை 2026 12:44:21 PM (IST)



முன்னாள் மீனவன்Feb 19, 2026 - 07:12:35 PM | Posted IP 162.1*****