» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
பெண் வருவாய் ஆய்வாளர் தூக்கிட்டு தற்கொலை
புதன் 21, மே 2025 10:36:30 AM (IST)
குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரிந்த வருவாய் ஆய்வாளர் அனிதா என்பவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நாகர்கோவில் இருளப்பபுரம் சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் மனோகரன். மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி அனிதா (42). நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட வழங்கல் அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளராக பணியில் இருந்து வந்தார். உடல் நிலை சரியில்லாமல் 2 மாதங்களாக மருத்துவ விடுப்பில் இருந்து வந்த அனிதா நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்து கோட்டாறு போலீசார் அனிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சில மாதங்களாக மன அழுத்தம் காரணமாக அனிதா சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் தற்கொலை செய்தாரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குமரி மாவட்டத்தில் 8 நாட்களில் 10 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு!!
புதன் 9, ஜூலை 2025 8:26:11 PM (IST)

விரிகோடு ரயில்வே கேட் வழியாக மேம்பாலம் அமைக்கப்படும்: விஜய் வசந்த் எம்.பி. உறுதி!!
புதன் 9, ஜூலை 2025 8:22:21 PM (IST)

பிளஸ்-2 மாணவி பலாத்காரம்: ஏற்கனவே திருமணமான வாலிபர் மீது போக்சோ வழக்கு
புதன் 9, ஜூலை 2025 8:19:31 PM (IST)

சுற்றுலா திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா அழைப்பு!
புதன் 9, ஜூலை 2025 5:19:37 PM (IST)

கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் கூடுதல் கட்டிடப் பணிகள்: அமைச்சர் அடிக்கல் நாட்டினார்!
புதன் 9, ஜூலை 2025 4:08:01 PM (IST)

எல்லோருக்கும் எல்லாம் என்ற உயரிய நோக்கில் அரசு செயல்படுகிறது: அமைச்சர் மனோ தங்கராஜ்
செவ்வாய் 8, ஜூலை 2025 4:56:47 PM (IST)
