» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
வீடு புகுந்து சிறுமியை தாக்கியதாக ஆட்டோ டிரைவர் கைது
வெள்ளி 16, மே 2025 11:01:32 AM (IST)
மாா்த்தாண்டம் அருகே வீடு புகுந்து சிறுமியைத் தாக்கியதாக ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனா்.
குமரி மாவட்டம், மாா்த்தாண்டம் அருகே நட்டாலம், இடவிளாகம் பகுதியைச் சோ்ந்த தம்பதி ராதாகிருஷ்ணன்-ஜெயலட்சுமி (45). இவா்களது மகள் சௌபா்ணிகா (11), நட்டாலம் அரசுப் பள்ளியில் 6ஆம் வகுப்பு படித்து வருகிறாா்.
இவா்களது பக்கத்து வீட்டைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் சதீஷ் (37). 2 நாள்களுக்கு முன்பு செளபா்ணிகாவை சதீஷின் 11 வயது மகள் அவதூறாகப் பேசினாராம். இதுகுறித்து சதீஷிடம் ராதாகிருஷ்ணன் கேட்டுள்ளாா். சம்பவத்தன்று ராதாகிருஷ்ணன் தனது மனைவியுடன் வெளியே சென்றநிலையில், வீட்டில் சௌபா்ணிகா மட்டும் இருந்துள்ளாா்.
அப்போது சதீஷ் சென்று சிறுமியிடம் தகாத வாா்த்தைகளால் பேசி தாக்கியதாகக் கூறப்படுகிறது. காயமடைந்த சிறுமியை பெற்றோா் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்று சிகிச்சையளித்தனா். இதுகுறித்து ஜெயலட்சுமி அளித்த புகாரின்பேரில், மாா்த்தாண்டம் போலீசார் வழக்குப் பதிந்து சதீஷை கைது செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் வளர்ச்சி திட்டப் பணிகள்: ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
வியாழன் 3, ஜூலை 2025 10:16:50 AM (IST)

கால்நடைகளுக்கு கால்நோய், வாய்நோய் தடுப்பூசி பணி : ஆட்சியர் துவக்கி வைத்தார்!
புதன் 2, ஜூலை 2025 3:41:45 PM (IST)

குமரி மாவட்டத்தில் 3 அரசியல் கட்சிகளின் அங்கீகாரம் ரத்து : தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!
செவ்வாய் 1, ஜூலை 2025 10:49:52 AM (IST)

இஸ்ரோ இன்ஜினியர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை: குடும்ப பிரச்சினையால் விபரீத முடிவு!
செவ்வாய் 1, ஜூலை 2025 8:34:20 AM (IST)

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி சேர்க்கை கால நீடிப்பு!
திங்கள் 30, ஜூன் 2025 5:48:59 PM (IST)

தனியார் மருத்துவமனையில் ஆட்சியர் ஆய்வு!
திங்கள் 30, ஜூன் 2025 4:04:27 PM (IST)
