» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
வீடு புகுந்து சிறுமியை தாக்கியதாக ஆட்டோ டிரைவர் கைது
வெள்ளி 16, மே 2025 11:01:32 AM (IST)
மாா்த்தாண்டம் அருகே வீடு புகுந்து சிறுமியைத் தாக்கியதாக ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனா்.
குமரி மாவட்டம், மாா்த்தாண்டம் அருகே நட்டாலம், இடவிளாகம் பகுதியைச் சோ்ந்த தம்பதி ராதாகிருஷ்ணன்-ஜெயலட்சுமி (45). இவா்களது மகள் சௌபா்ணிகா (11), நட்டாலம் அரசுப் பள்ளியில் 6ஆம் வகுப்பு படித்து வருகிறாா்.
இவா்களது பக்கத்து வீட்டைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் சதீஷ் (37). 2 நாள்களுக்கு முன்பு செளபா்ணிகாவை சதீஷின் 11 வயது மகள் அவதூறாகப் பேசினாராம். இதுகுறித்து சதீஷிடம் ராதாகிருஷ்ணன் கேட்டுள்ளாா். சம்பவத்தன்று ராதாகிருஷ்ணன் தனது மனைவியுடன் வெளியே சென்றநிலையில், வீட்டில் சௌபா்ணிகா மட்டும் இருந்துள்ளாா்.
அப்போது சதீஷ் சென்று சிறுமியிடம் தகாத வாா்த்தைகளால் பேசி தாக்கியதாகக் கூறப்படுகிறது. காயமடைந்த சிறுமியை பெற்றோா் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்று சிகிச்சையளித்தனா். இதுகுறித்து ஜெயலட்சுமி அளித்த புகாரின்பேரில், மாா்த்தாண்டம் போலீசார் வழக்குப் பதிந்து சதீஷை கைது செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குமரி மாவட்டத்தில் ரூ.8.03 கோடி மதிப்பில் புதிய பாலம், கட்டிடங்கள்: முதல்வர் திறந்து வைத்தார்!
வெள்ளி 22, ஆகஸ்ட் 2025 5:19:32 PM (IST)

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு : மீனவர்கள் வேலை நிறுத்தம் - ஆர்ப்பாட்டம்!
வெள்ளி 22, ஆகஸ்ட் 2025 12:49:08 PM (IST)

இளைஞர்களுக்கு ஃபோர்க்லிஃப்ட் ஆப்பரேட்டர் பயிற்சி : ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்!
வெள்ளி 22, ஆகஸ்ட் 2025 12:03:47 PM (IST)

நாகர்கோவிலில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
வெள்ளி 22, ஆகஸ்ட் 2025 11:36:02 AM (IST)

பொதுவுடைமை வீரர் ப.ஜீவானந்தம் பிறந்த நாள் விழா : ஆட்சியர், மேயர் அரசியல் கட்சியினர் மரியாதை!
வியாழன் 21, ஆகஸ்ட் 2025 3:13:54 PM (IST)

திருமணமான 2 ஆண்டுகளில் மனைவி தற்கொலை : பாதுகாப்பு படை வீரர் மீது வழக்குப் பதிவு
வியாழன் 21, ஆகஸ்ட் 2025 11:40:18 AM (IST)
