» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
இலங்கை பவுலரின் ஒரே ஓவரில் 5 சிக்சர் விளாசல்: அதிர்ச்சியில் தந்தை மரணம்!
வெள்ளி 19, செப்டம்பர் 2025 5:08:18 PM (IST)

இலங்கை சுழற்பந்து வீச்சாளர் வெல்லாலகே வீசிய ஒரே ஓவரில் ஆப்கன் வீரர் 5 சிக்சர்களை விளாசியதால் அதிர்ச்சியில் அவரது தந்தை மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்.
இலங்கை சுழற்பந்து வீச்சாளர் வெல்லாலகே நேற்று வீசிய கடைசி ஓவரில் ஆப்கன் வீரர் முகமது நபி தொடர்ச்சியாக 5 சிக்சர் விளாசினார். இந்த போட்டியை இலங்கையில் டிவியில் பார்த்துக்கொண்டிருந்த வெல்லாலகேவின் தந்தை சுரங்கா, மகனின் பந்துவீச்சை பார்த்து அதிர்ச்சி அடைந்து மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். இதுபற்றி நேற்று போட்டி முடிந்ததும் வெல்லாலகேவிடம் தெரிவிக்கப்பட்டது.
இந்த செய்தியை கேட்டு வெல்லாலகே கண்ணீர் சிந்தினார். அவருக்கு சக வீரர்கள் ஆறுதல் கூறினர். தொடர்ந்து தந்தையின் இறுதிச்சடங்கில் பங்கேற்க அவர் கொழும்பு திரும்பினார். இதனால் நாளை வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் அவர் பங்கேற்க மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிராஜ், கே.எல்.ராகுல் அசத்தல்: மே.இ. தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா அபாரம்!
வியாழன் 2, அக்டோபர் 2025 8:32:17 PM (IST)

ஆசியத் தொடர் சம்பளம் ராணுவத்துக்கு நன்கொடை: சூர்ய குமார்
திங்கள் 29, செப்டம்பர் 2025 12:01:59 PM (IST)

பாகிஸ்தான் அமைச்சரிடம் வெற்றிக் கோப்பையை வாங்க இந்திய அணி வீரர்கள்!
திங்கள் 29, செப்டம்பர் 2025 10:31:53 AM (IST)

குல்தீப், திலக் அபாரம்: பாகிஸ்தானை வீழ்த்தி ஆசிய கோப்பையை வென்றது இந்தியா!
திங்கள் 29, செப்டம்பர் 2025 8:42:03 AM (IST)

ஆசிய கோப்பை: சூப்பர் ஓவரில் இலங்கையை வீழ்த்தியது இந்தியா
சனி 27, செப்டம்பர் 2025 10:12:52 AM (IST)

சாய் சுதர்சன், கே.எல். ராகுல் அபாரம் : 412 இலக்கை விரட்டி இந்தியா ஏ அணி சாதனை!
வெள்ளி 26, செப்டம்பர் 2025 5:08:30 PM (IST)
