» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஸ்ரேயாஸ் அதிரடியில் சிஎஸ்கே தோல்வி : பிளே ஆஃப் வாய்ப்பை இழந்து வெளியேறியது!

வியாழன் 1, மே 2025 11:06:05 AM (IST)



ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியடைந்த சென்னை, முதல் அணியாக பிளே ஆஃப் வாய்ப்பை இழந்தது சென்னை அணி. 

ஐபிஎல் டி20 தொடரின் 18-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெற்ற 49-வது லீக் போட்டியில் சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் அணி, பீல்டிங் தேர்வு செய்துள்ளது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக ரஷீத் மற்றும் ஆயுஷ் அடுத்தடுத்து அவுட் ஆகி வெளியேறினர். 

ரஷீத் 11 ரன்களும் ஆயுஷ் 7 ரன்களும் எடுத்தனர். அடுத்து வந்த ரவீந்திர ஜடேஜா 17 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். சிறுது நேரம் தாக்குபிடித்த டெவால்டு ப்ரேவிஸ் 32 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். அதிரடியாக ஆடிய சாம் கரண் 30 பந்துகளில் அரைசதம் கடந்தார். அவர் 4 சிக்ஸர் உள்பட 9 பவுண்டரிகள் உள்பட 88 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

பஞ்சாப் அணியின் சஹால் 19வது ஓவரில், 4 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். கடைசி 3 பந்துகளில் 3 விக்கெட் வீழ்த்தி ஹாட்ரிக் எடுத்தார். இறுதியில் சென்னை அணி, 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 190 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் அணியின் சஹால் 4 விக்கெட்டுகளும் ஜான்சன் மற்றும் அர்ஷ்தீப் சிங் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதையடுத்து 191 ரன்கள் வெற்றி இலக்குடன் களம் இறங்கிய பஞ்சாப் அணியில் பிரியான்ஷி 23 ரன்களில் அவுட்டானார். அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த பிரப்சிம்ரன்சிங் 54 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஷஷாங்க் 23 ரன்களிலும், ஸ்ரேயாஸ் ஐய்யர் 72 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில் பஞ்சாப் அணி 19.3 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்து, 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம், பிளே ஆஃப் வாய்ப்பை இழந்த சென்னை அணி, ரசிகர்களை ஏமாற்றி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory