» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
தூத்துக்குடியில் டி-20 கிரிக்கெட்: டிசிடபிள்யூ அணி கோப்பையை வென்றது.
ஞாயிறு 17, ஆகஸ்ட் 2025 7:26:18 PM (IST)

தூத்துக்குடியில் நடைபெற்ற டி-20 கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் டிசிடபிள்யூ அணி வெற்றி பெற்று கோப்பையை வென்றது.
தூத்துக்குடியில் சீலைன்ஸ் கிரிக்கெட் கிளப் மற்றும் பகடா ஸ்போர்ட்ஸ் இணைந்து நடத்திய மாவட்ட கிரிக்கெட் சங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட மெதோடியஸ் மெமோரியல் டி20 கிரிக்கெட் போட்டி 11-ம் தேதி தொடங்கியது. கிரிக்கெட் போட்டியினை அமைச்சர் கீதாஜீவன், மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவர் ஆல்பர்ட் முரளிதரன், துணை தலைவர் டாக்டர் மகிழ் ஜூவன் ஆகியோர் கலந்துகொண்டு தொடங்கி வைத்தனர்.
ஆறு நாட்கள் நடைபெற்ற இந்த டி 20-கிரிக்கெட் போட்டியில் தூத்துக்குடி மாவட்டத்தை சார்ந்த 16 அணிகள் பங்கேற்றன. இறுதி ஆட்டத்தில் டிசிடபிள்யூ அணியும் - ஸ்டான்லி பில்டர்ஸ் அணியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த ஸ்டான்லி பில்டர்ஸ் அணி 20-ஓவர்களில் 110 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. பின்னர் ஆடிய டிசிடபிள்யூ அணி நிர்ணயம் 13 ஓவர்களில் 2-விக்கெட் இழப்பிற்கு 113-ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
வெற்றி பெற்ற அணிக்கு ரூ.40-ஆயிரம் ரொக்க பணம் மற்றும் வெற்றி கோப்பை வழங்கப்பட்டது. இரண்டாவது இடம் பெற்ற அணிக்கு ரூபாய் 20-ஆயிரம் ரொக்க பரிசு வழங்கப்பட்டது. டி-20 கிரிக்கெட் போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் விழா கமிட்டினர் ராஜாபோஸ் ரீகன் மற்றும் விஜய் ஆகியோர் செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உலகக் கோப்பை குத்துச்சண்டை பதக்க பட்டியலில் இந்திய அணி முதலிடம் : பிரதமர் வாழ்த்து
திங்கள் 24, நவம்பர் 2025 5:29:45 PM (IST)

கவுகாத்தி டெஸ்டில் வலுவான நிலையில் தென்ஆப்பிரிக்கா: இந்தியா 201 ரன்னில் ஆல்-அவுட்
திங்கள் 24, நவம்பர் 2025 4:21:28 PM (IST)

பார்வையற்றோர் மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி சாம்பியன்!
திங்கள் 24, நவம்பர் 2025 12:41:54 PM (IST)

இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: தென் ஆப்பிரிக்கா நிதான ஆட்டம்!
சனி 22, நவம்பர் 2025 5:02:44 PM (IST)

ஆஷஸ் டெஸ்ட் தொடர்: அபார வெற்றியுடன் தொடங்கிய ஆஸ்திரேலியா..!
சனி 22, நவம்பர் 2025 4:31:08 PM (IST)

ஒரே நாளில் 19 விக்கெட்டுகள் வீழ்ச்சி: 100 ஆண்டு ஆஷஸ் வரலாற்றில் முதல் முறை..!
வெள்ளி 21, நவம்பர் 2025 5:25:58 PM (IST)


.gif)