» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

தூத்துக்குடியில் டி-20 கிரிக்கெட்: டிசிடபிள்யூ அணி கோப்பையை வென்றது.

ஞாயிறு 17, ஆகஸ்ட் 2025 7:26:18 PM (IST)



தூத்துக்குடியில் நடைபெற்ற டி-20 கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் டிசிடபிள்யூ அணி வெற்றி பெற்று கோப்பையை வென்றது. 

தூத்துக்குடியில் சீலைன்ஸ் கிரிக்கெட் கிளப் மற்றும் பகடா ஸ்போர்ட்ஸ் இணைந்து நடத்திய மாவட்ட கிரிக்கெட் சங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட மெதோடியஸ் மெமோரியல் டி20 கிரிக்கெட் போட்டி 11-ம் தேதி தொடங்கியது. கிரிக்கெட் போட்டியினை அமைச்சர் கீதாஜீவன், மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவர் ஆல்பர்ட் முரளிதரன், துணை தலைவர் டாக்டர் மகிழ் ஜூவன் ஆகியோர் கலந்துகொண்டு தொடங்கி வைத்தனர்.

ஆறு நாட்கள் நடைபெற்ற இந்த டி 20-கிரிக்கெட் போட்டியில் தூத்துக்குடி மாவட்டத்தை சார்ந்த 16 அணிகள் பங்கேற்றன. இறுதி ஆட்டத்தில் டிசிடபிள்யூ அணியும் - ஸ்டான்லி பில்டர்ஸ் அணியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த ஸ்டான்லி பில்டர்ஸ் அணி 20-ஓவர்களில் 110 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. பின்னர் ஆடிய டிசிடபிள்யூ அணி நிர்ணயம் 13 ஓவர்களில் 2-விக்கெட் இழப்பிற்கு 113-ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

வெற்றி பெற்ற அணிக்கு ரூ.40-ஆயிரம் ரொக்க பணம் மற்றும் வெற்றி கோப்பை வழங்கப்பட்டது. இரண்டாவது இடம் பெற்ற அணிக்கு ரூபாய் 20-ஆயிரம் ரொக்க பரிசு வழங்கப்பட்டது. டி-20 கிரிக்கெட் போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் விழா கமிட்டினர் ராஜாபோஸ் ரீகன் மற்றும் விஜய் ஆகியோர் செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory