» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
குற்றாலத்திலிருந்து பாபநாசம் சென்றபோது விபத்து: சுற்றுலா பயணி பரிதாப பலி; 10 பேர் படுகாயம்!
ஞாயிறு 12, ஜூலை 2026 11:48:25 AM (IST)

கடையத்தில் வேன் நடுரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஈரோட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். 10 பயணிகள் படுகாயமடைந்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் கொடுமுடி கரட்டாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த நண்பர்கள் 25 பேர் வேன் மூலம் தென்காசி மாவட்டம் குற்றாலத்திற்குச் சுற்றுலா வந்திருந்தனர். அங்கு அறை எடுத்துத் தங்கி அருவிகளில் குளித்த பின், குழுவிலிருந்து 11 பயணிகள் மட்டும் வேனில் பாபநாசத்திற்குப் புறப்பட்டனர். வாகனத்தைக் கொடுமுடி தாமரைப்பாளையம் பகவதி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கந்தசாமி மகன் சக்திவேல் ஓட்டினார்.
வேன் கடையம் அய்யம்பிள்ளைக்குளம் அருகே சென்றபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து நடுரோட்டில் தலைகீழாகக் கவிழ்ந்தது. விபத்து தொடர்பான தகவலறிந்த கடையம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இவர்களுடன் அப்பகுதிப் பொதுமக்களும் இணைந்து வேனில் படுகாயமடைந்தவர்களை மீட்டனர்.
வாகனத்தின் கீழ் பயணி ஒருவர் சிக்கியிருந்தது கண்டறியப்பட்டது. உடனடியாகப் பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு வேன் தூக்கி நகர்த்தப்பட்டபோது, வாகனத்தின் கீழ் சிக்கியிருந்த பயணி தலை நசுங்கி உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. விசாரணையில், உயிரிழந்தவர் ஈரோடு மேட்டுக்கடை வேப்பமலை பிரதான சாலை பகுதியைச் சேர்ந்த சின்னசாமி மகன் சரவணன் என்பது தெரியவந்தது.
இவ்விபத்தில் கரட்டாம்பாளையத்தைச் சேர்ந்த சாந்தகுமார், மதுபாலன், கீர்த்தி குமார், மனோகரன், மகேஷ், கொடுமுடியைச் சேர்ந்த உதயகுமார், ராஜேஷ்குமார், கிருபாகரன் உள்ளிட்ட 10 பயணிகள் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காகத் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து காரணமாக அப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து தொடர்பாகக் கடையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழகத்தில் ஒரு வாரத்திற்கு கோழி இறைச்சி விற்பனை நிறுத்தம்? கோழி வணிகர்கள் கூட்டமைப்பு எச்சரிக்கை!
ஞாயிறு 12, ஜூலை 2026 11:55:48 AM (IST)

ஆழ்துளைக் கிணறு தோண்டிய போது மின்சாரம் தாக்கி 4 தொழிலாளர்கள் பரிதாப பலி!
ஞாயிறு 12, ஜூலை 2026 11:40:55 AM (IST)

போலி ஆவணம் தயாரித்து விமானப்படை அதிகாரி நிலம் மோசடி: தம்பதி உட்பட 3 பேர் கைது!
ஞாயிறு 12, ஜூலை 2026 11:38:10 AM (IST)

திமுகவினர் ஓடி ஒளிபவர்கள் அல்ல: அனிதா ராதாகிருஷ்ணன் பேட்டி!
ஞாயிறு 12, ஜூலை 2026 9:20:58 AM (IST)

தூத்துக்குடியில் திஷா குழு ஆய்வுக் கூட்டம்: கனிமொழி எம்.பி. தலைமையில் அரசு நலத்திட்டங்கள் குறித்து ஆலோசனை!
சனி 11, ஜூலை 2026 8:45:47 PM (IST)

அரசு வழக்கறிஞர்கள் நியமன விவகாரம்: தவெக குற்றச்சாட்டுக்குக் கனிமொழி எம்.பி. பதிலடி!
சனி 11, ஜூலை 2026 8:19:18 PM (IST)


