» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஸ்டார் 3.0 மென்பொருள் கலந்துரையாடல்: பத்திரம் எழுத்தர்களுக்குச் சார் பதிவாளர் ஆலோசனை!
சனி 11, ஜூலை 2026 8:12:23 PM (IST)

கல்லிடைக்குறிச்சி சார் பதிவாளர் அலுவலகத்தில் ஸ்டார் 3.0 மென்பொருள் குறித்த ஆலோசனை மற்றும் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு பதிவுத்துறையில் 3.0 மென்பொருள் வழியாக இணைய வழி பத்திரப்பதிவு நடைமுறையை அமல்படுத்தியுள்ளது. இப்புதிய இணைய வழி பத்திரப்பதிவு நடைமுறையை முறையாகப் பின்பற்றிப் பத்திரம் பதிவு செய்வது குறித்துக் கல்லிடைக்குறிச்சி சார் பதிவாளர் அலுவலகத்தில் ஆலோசனைக் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.
இக் கூட்டத்தில், பத்திரம் எழுத்தாளர்கள் மற்றும் கணினி உதவியாளர்களுக்குச் சார் பதிவாளர் பி.சுதாகர் குமார் விரிவான ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் வழங்கினார். இக் கலந்துரையாடல் கூட்டத்தில் பத்திரம் எழுத்தர்கள், வழக்குரைஞர்கள், கணினி உதவியாளர்கள், சார் பதிவாளர் அலுவலகப் பணியாளர்கள் கலந்துகொண்டு புதிய மென்பொருள் செயல்பாடுகள் குறித்துக் கேட்டறிந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பள்ளிகளில் முழுமையான வானவியல் பாடத்திட்டம் தேவை: தமிழக அரசுக்கு டாஸ் பொதுக்குழு வலியுறுத்தல்!
ஞாயிறு 12, ஜூலை 2026 6:58:49 PM (IST)

தமிழகத்தில் ஒரு வாரத்திற்கு கோழி இறைச்சி விற்பனை நிறுத்தம்? கோழி வணிகர்கள் கூட்டமைப்பு எச்சரிக்கை!
ஞாயிறு 12, ஜூலை 2026 11:55:48 AM (IST)

குற்றாலத்திலிருந்து பாபநாசம் சென்றபோது விபத்து: சுற்றுலா பயணி பரிதாப பலி; 10 பேர் படுகாயம்!
ஞாயிறு 12, ஜூலை 2026 11:48:25 AM (IST)

ஆழ்துளைக் கிணறு தோண்டிய போது மின்சாரம் தாக்கி 4 தொழிலாளர்கள் பரிதாப பலி!
ஞாயிறு 12, ஜூலை 2026 11:40:55 AM (IST)

போலி ஆவணம் தயாரித்து விமானப்படை அதிகாரி நிலம் மோசடி: தம்பதி உட்பட 3 பேர் கைது!
ஞாயிறு 12, ஜூலை 2026 11:38:10 AM (IST)

திமுகவினர் ஓடி ஒளிபவர்கள் அல்ல: அனிதா ராதாகிருஷ்ணன் பேட்டி!
ஞாயிறு 12, ஜூலை 2026 9:20:58 AM (IST)


