» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கூடங்குளம் அணு மின் நிலையத்தில் மீண்டும் கோளாறு: 1,000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு!
வியாழன் 9, ஜூலை 2026 10:40:43 AM (IST)

டர்பனில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாகக் கூடங்குளம் முதலாவது அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் 1,000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ரஷிய நாட்டின் நிதி உதவியுடன் தலா 1,000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. புதன்கிழமை மாலை முதலாவது அணு உலையின் டர்பன் பகுதியில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. விஞ்ஞானிகள், தொழில்நுட்ப வல்லுனர்கள் உடனடியாகப் பழுதைச் சரிசெய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
முன்னதாக, முதலாவது அணு உலையில் உள்ள ஜெனரேட்டரில் ஏற்பட்ட பழுது காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டிருந்தது. பழுது சரிசெய்யப்பட்டு அண்மையில்தான் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கப்பட்டது. இந்நிலையில், டர்பனில் ஏற்பட்ட பழுது காரணமாக மீண்டும் முதலாவது அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. முதலாவது அணு உலையில் அடுத்தடுத்து பழுது ஏற்பட்டு வரும் நிலையில், 2-வது அணு உலையில் வழக்கம் போல் 1,000 மெகாவாட் மின் உற்பத்தி தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழகத்தில் ஒரு வாரத்திற்கு கோழி இறைச்சி விற்பனை நிறுத்தம்? கோழி வணிகர்கள் கூட்டமைப்பு எச்சரிக்கை!
ஞாயிறு 12, ஜூலை 2026 11:55:48 AM (IST)

குற்றாலத்திலிருந்து பாபநாசம் சென்றபோது விபத்து: சுற்றுலா பயணி பரிதாப பலி; 10 பேர் படுகாயம்!
ஞாயிறு 12, ஜூலை 2026 11:48:25 AM (IST)

ஆழ்துளைக் கிணறு தோண்டிய போது மின்சாரம் தாக்கி 4 தொழிலாளர்கள் பரிதாப பலி!
ஞாயிறு 12, ஜூலை 2026 11:40:55 AM (IST)

போலி ஆவணம் தயாரித்து விமானப்படை அதிகாரி நிலம் மோசடி: தம்பதி உட்பட 3 பேர் கைது!
ஞாயிறு 12, ஜூலை 2026 11:38:10 AM (IST)

திமுகவினர் ஓடி ஒளிபவர்கள் அல்ல: அனிதா ராதாகிருஷ்ணன் பேட்டி!
ஞாயிறு 12, ஜூலை 2026 9:20:58 AM (IST)

தூத்துக்குடியில் திஷா குழு ஆய்வுக் கூட்டம்: கனிமொழி எம்.பி. தலைமையில் அரசு நலத்திட்டங்கள் குறித்து ஆலோசனை!
சனி 11, ஜூலை 2026 8:45:47 PM (IST)


