» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பேரறிவாளன் வழக்கறிஞராகப் பதிவு: நீதித்துறைக்கே இழுக்கு - காங். எம்பி சுதா கடும் கண்டனம்
புதன் 29, ஏப்ரல் 2026 4:23:21 PM (IST)

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று விடுதலையான பேரறிவாளன், வழக்கறிஞராகப் பதிவு செய்திருப்பதற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது நீதித்துறையின் கருப்பு நாள் என காங்கிரஸ் எம்பி சுதா விமர்சித்துள்ளார்.
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த சுதா கூறியதாவது: "ஏப்ரல் 27-ம் தேதி இந்திய அரசியலமைப்பின் கருப்பு நாள். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன் வழக்கறிஞராகப் பதிவு செய்திருப்பது நீதித்துறைக்கே இழுக்கு. தீவிரவாதச் செயலில் ஈடுபட்டுத் தண்டனை பெற்ற ஒருவருக்கு வழக்கறிஞராகப் பதிவு செய்ய யார் அனுமதி அளித்தது?
தற்போது பார் கவுன்சிலுக்குத் தேர்தல் நடைபெற்றுள்ள சூழலில், புதிய வழக்கறிஞர்களைப் பதிவு செய்ய அந்த உறுப்பினர்களுக்கு எந்த உரிமையும் இல்லை. இந்த நிலை நீடித்தால் குற்றவாளிகள் எளிதாக வழக்கறிஞர் ஆகிவிடுவர். வழக்கறிஞர் என்ற போர்வையில் தீவிரவாதிகள் ஊடுருவுவதை அனுமதிக்க மாட்டோம்.
பேரறிவாளன் பதிவை ரத்து செய்யக் கோரி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் தமிழக முதலமைச்சர் ஆகியோருக்குக் கடிதம் அனுப்பியுள்ளேன். இதற்கு காரணமானவர்கள் மீது விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்."
பேரறிவாளன் தரப்பு விளக்கம்:
31 ஆண்டு சிறைவாசத்திற்குப் பிறகு 2022-ல் உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட பேரறிவாளன், சிறையிலிருந்தபோதே கல்வியில் ஆர்வம் காட்டி வந்தார். விடுதலையான பிறகு பெங்களூரு சட்டக் கல்லூரியில் பயின்று 2025-ல் பட்டம் பெற்றார். அகில இந்திய பார் தேர்விலும் (AIBE) வெற்றி பெற்ற அவர், கடந்த ஏப்ரல் 27 அன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் வழக்கறிஞராகப் பதிவு செய்தார்.
இது குறித்துப் பேசிய பேரறிவாளன், "சட்ட உதவி கிடைக்காமல் சிறையில் வாடும் ஏழை எளிய கைதிகளின் குரலாக ஒலிக்கவே நான் வழக்கறிஞராகியுள்ளேன். தண்டனைக்குப் பிந்தைய மறுஆய்வுச் சட்டங்கள் இந்தியாவில் வலுப்பெற வேண்டும் என்பதே எனது கனவு" எனத் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஷீரடி சாய் பாபா கோயிலில் தவெக தலைவர் விஜய் தரிசனம் : மனமுருகி வழிபட்டார்
புதன் 29, ஏப்ரல் 2026 4:06:53 PM (IST)

வாக்களிக்கச் சென்றவர் சாலை விபத்தில் உயிரிழப்பு : குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் இழப்பீடு கோரிக்கை!
புதன் 29, ஏப்ரல் 2026 12:15:23 PM (IST)

13 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: தந்தைக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை!
புதன் 29, ஏப்ரல் 2026 11:37:36 AM (IST)

விவசாயி மீது துப்பாக்கிச் சூடு: சார் ஆட்சியர் ஆஜராகி விளக்கம் - உயர்நீதிமன்றம் விசாரணை
புதன் 29, ஏப்ரல் 2026 11:33:46 AM (IST)

மதுரையில் சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம் : லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்!
புதன் 29, ஏப்ரல் 2026 10:44:57 AM (IST)

தமிழகத்தில் சிலிண்டர் விநியோகக் காத்திருப்புக் காலம் அதிரடியாகக் குறைப்பு: பொதுமக்கள் மகிழ்ச்சி!
புதன் 29, ஏப்ரல் 2026 10:17:53 AM (IST)


