» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

செய்துங்கநல்லூரில் பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரயில் நிறுத்தம் - பொதுமக்கள் கோரிக்கை!

சனி 6, டிசம்பர் 2025 8:59:06 PM (IST)



பாலக்காடு எக்ஸ்பிரஸை செய்துங்கநல்லூரில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டி மதுரை ரயில்வே உதவி கோட்ட மேலாளரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர். 

தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூரில் நடைமேடை விரிவாக்கப்பணி, மேம்பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணியை ஆய்வு செய்ய மதுரை ரயில்வே உதவி கோட்ட மேலாளர் நாகேஸ்வரராவ் வருகை புரிந்தார். அவரிடம் செய்துங்கநல்லூர் பொதுமக்கள் சார்பில் பாலக்காடு எக்ஸ்பிரஸை நிறுத்த வேண்டும் என கோரிக்கை மனுவை கொடுததனர். கூட்டுறவு சங்க தலைவர் சுந்தரபாண்டியன் தலைமை வகித்தார். 

புதிதாக கட்டப்பட்டு வரும் நடைமேடை மற்றும், மேம்பாலம் பணிக்காக நன்றியை தெரிவித்தனர். இரண்டாவது நடைமேடையில் மின்சார விளக்கு வசதி செய்து தரவேண்டும் என கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து 3 வருட காலமாக பாலக்காடு எக்ஸ்பிரஸ் செய்துங்கநல்லூரில் நின்று செல்லவேண்டும் என பொதுமக்கள் போராடி வருகிறார்கள். அந்த ரயிலை செய்துங்கநல்லூர் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்தனர். 

இந்த நிகழ்ச்சியில் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, ஓய்வு பெற்ற டி.எஸ்.பி தனராஜ், எஸ்.ஐ. மாரிசுடலை, கூட்டுறவு ஆடிட்டர் திருச்செல்வம், ராணுவ வீரர் ஆறுமுகம்,வியாபாரிகள் சங்க தலைவர் முருகன், தவ்ஹீத் ஜமாதை சேர்ந்த அப்துல், சன்னியாசி, கூட்டறவு சங்க மேலாளர் மாரியப்பன், முன்னாள் வார்டு உறுப்பினர் வேம்பு துரை உள்பட பலர் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory