» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
இலங்கை கடல் பகுதியில் உருவானது டிக்வா புயல்: தமிழகத்தில் அதி கனமழை எச்சரிக்கை!
வியாழன் 27, நவம்பர் 2025 4:48:22 PM (IST)
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளில் டிக்வா புயல் உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நேற்று (26-11-2025) தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு இலங்கை - இந்திய பெருங்ககடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று நள்ளிரவு (23.30 மணி அளவில்) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக, தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப்பகுதிகளில் வலுப்பெற்று, இன்று (27-11-2025) காலை 5.30 மணியளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுப்பெற்று நிலையில், தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 'டிக்வா' புயலாக உருவானது.
இது இலங்கை அம்பாந்தோட்டையிலிருந்து, கிழக்கு-வடகிழக்கே சுமார் 130 கிலோ மீட்டர் தொலைவிலும், இலங்கை மட்டக்கிளப்பிலிருந்து தெற்கு- தென்கிழக்கே 120 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுவையிலிருந்து தெற்கு-தென்கிழக்கே 600 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து தெற்கு-தென்கிழக்கே 700 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
அடுத்த 48 மணி நேரத்தில் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் வழியாக டிக்வா புயல் நகரும். நவ.30ல் வட தமிழகம், புதுவை, தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.நவ.27ல் தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், பலத்த தரை காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நவ.28ல் நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய நான்கு மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தொழில்நுட்பக் கோளாறால் சுரங்கப் பாதையில் நின்ற மெட்ரோ ரயில்: பயணிகள் மீட்பு!!
புதன் 3, டிசம்பர் 2025 11:10:24 AM (IST)

கம்ப்யூட்டரை ஆன் செய்யாமல் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தாரா? - தமிழக அரசு விளக்கம்
புதன் 3, டிசம்பர் 2025 11:04:22 AM (IST)

ஓட்டல் உரிமையாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு: நெல்லை அருகே பரபரப்பு!!
புதன் 3, டிசம்பர் 2025 8:24:25 AM (IST)

தமிழக அரசின் பதிவுத்துறையில் ஒரே நாளில் ரூ.302 கோடி வருவாய்: வரலாற்று சாதனை!
செவ்வாய் 2, டிசம்பர் 2025 8:08:31 PM (IST)

3வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை : வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை!
செவ்வாய் 2, டிசம்பர் 2025 8:04:20 PM (IST)

தூத்துக்குடி மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை : வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
செவ்வாய் 2, டிசம்பர் 2025 7:55:28 PM (IST)


.gif)