» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
வீடு புகுந்து தம்பதியை மிரட்டி நகை-பணம் கொள்ளை : மர்மநபர்கள் கைவரிசை!!
புதன் 19, நவம்பர் 2025 8:12:19 AM (IST)
ராதாபுரம் அருகே வீடுபுகுந்து தம்பதியை மிரட்டி 4 பவுன் நகை-பணத்தை பறித்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ராதாபுரம் அருகே பல்சேரி பகுதியைச் சேர்ந்தவர் சாமி (70). இவருடைய மனைவி சொர்ணம் (65). இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி வெளியூர்களில் வசித்து வருகின்றனர். எனவே சாமி-சொர்ணம் தம்பதியர் வீட்டில் தனியாக வசித்து வருகின்றனர். இதனை நோட்டமிட்ட மர்மநமபர்கள் நேற்று அதிகாலையில் சாமியின் வீட்டுக்குள் நைசாக புகுந்தனர்.
அங்கு வீட்டில் தூங்கி கொண்டிருந்த சாமி-சொர்ணம் தம்பதியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி, சொர்ணம் அணிந்திருந்த 4 பவுன் நகைகளை பறித்தனர். மேலும் வீட்டில் இருந்த ரூ.10 ஆயிரத்தையும் கொள்ளையடித்து தப்பி சென்றனர். கொள்ளையர்கள் சென்றதும் தம்பதியர் கூச்சலிட்டனர். உடனே அக்கம்பக்கத்தினர் வருவதற்குள் மர்மநபர்கள் இருளில் தப்பி சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில், ராதாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
சனி 22, நவம்பர் 2025 4:22:46 PM (IST)

தமிழக அரசின் விருது பெற்ற வீரவநல்லூர் பாய் நெசவாளர் பெண்களுக்கு பாராட்டு விழா
சனி 22, நவம்பர் 2025 3:36:59 PM (IST)

கொலை வழக்கில் கைதான 2பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
சனி 22, நவம்பர் 2025 3:25:44 PM (IST)

தென்காசி அருகே லாரி மோதி 9 மாடுகள் பலி: 10க்கும் மேற்பட்ட மாடுகள் படுகாயம்!
சனி 22, நவம்பர் 2025 12:46:58 PM (IST)

நிலத்தகராறில் திமுக நிர்வாகி துப்பாக்கியால் சுட்டுக்கொலை: சேலம் அருகே பயங்கரம்!
சனி 22, நவம்பர் 2025 12:28:36 PM (IST)

கோவை, மதுரை மெட்ரோ ரயில் விவகாரத்தில் பிரதமர் தலையிட வேண்டும்: முதல்வர் கடிதம்
சனி 22, நவம்பர் 2025 10:41:22 AM (IST)


.gif)