» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஒப்பந்ததாரரிடம் உதவி கலெக்டராக நடித்து நகை, பணம் மோசடி : மேலும் ஒருவர் கைது!!
புதன் 19, நவம்பர் 2025 8:09:58 AM (IST)
கூடங்குளம் கட்டிட ஒப்பந்ததாரரிடம் உதவி கலெக்டராக நடித்து நகை-பணம் மோசடி செய்த வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை மாவட்டம் கூடங்குளம் பகுதியை சேர்ந்தவர் பிரவீன் (30). கட்டிட ஒப்பந்ததாரரான இவரிடம், நக்கனேரியை சேர்ந்த சத்யாதேவி (34) என்பவர் தன்னை உதவிகலெக்டர் என்று கூறியதுடன் வடக்கன்குளத்தை சேர்ந்த சுரேஷ் (37) என்பவரை மண்டல அதிகாரியாகவும் அறிமுகப்படுத்தினார்.
பின்னர் அவர்கள் கட்டிடங்கள் கட்டுவதற்கு அரசு ஒப்பந்தம் வாங்கி தருவதாக கூறி உள்ளனர். தொடர்ந்து அவர்கள், தன்னிடம் 17 பவுன் நகை, ரூ.8½ லட்சம் பெற்றுக் கொண்டு மோசடியில் ஈடுபட்டதாக கூறி பிரவீன் நெல்லை மாவட்ட எஸ்பி சிலம்பரசனிடம் புகார் மனு அளித்தார்.
எஸ்பி உத்தரவுப்படி, மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி விஜயகுமார் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் அன்னலெட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் ஆஷா ஜெபகர் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
கடந்த அக்டோபர் மாதம் 18-ந்தேதி சத்யா தேவி மற்றும் 22-ந்தேதி செல்லத்துரை என்பவரும் கைது செய்யப்பட்டனர். மேலும் இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட சுரேஷை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று சுரேஷை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து மோசடி சம்பவத்தின் போது பயன்படுத்திய ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
சனி 22, நவம்பர் 2025 4:22:46 PM (IST)

தமிழக அரசின் விருது பெற்ற வீரவநல்லூர் பாய் நெசவாளர் பெண்களுக்கு பாராட்டு விழா
சனி 22, நவம்பர் 2025 3:36:59 PM (IST)

கொலை வழக்கில் கைதான 2பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
சனி 22, நவம்பர் 2025 3:25:44 PM (IST)

தென்காசி அருகே லாரி மோதி 9 மாடுகள் பலி: 10க்கும் மேற்பட்ட மாடுகள் படுகாயம்!
சனி 22, நவம்பர் 2025 12:46:58 PM (IST)

நிலத்தகராறில் திமுக நிர்வாகி துப்பாக்கியால் சுட்டுக்கொலை: சேலம் அருகே பயங்கரம்!
சனி 22, நவம்பர் 2025 12:28:36 PM (IST)

கோவை, மதுரை மெட்ரோ ரயில் விவகாரத்தில் பிரதமர் தலையிட வேண்டும்: முதல்வர் கடிதம்
சனி 22, நவம்பர் 2025 10:41:22 AM (IST)


.gif)