» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தண்​ணீரில் இருந்து ஹைட்ரஜன் எடுத்து கேஸ் தயாரிப்பு: தமிழக விஞ்ஞானி அசத்தல்!!

சனி 20, செப்டம்பர் 2025 5:05:44 PM (IST)



தண்​ணீரில் இருந்து எடுக்​கப்​படும் ஹைட்​ரஜன் எரி​வா​யுவை சமையல் மற்​றும் தொழிற்​சாலைகளுக்​குப் பயன்படுத்தும் முறையை விஞ்​ஞானி பேளூர் ராமலிங்​கம் கார்த்​திக் கண்​டறிந்​துள்​ளார். 

திருப்​பூர் மாவட்​டம் அவி​நாசி அருகே வஞ்​சி​பாளை​யம் முரு​கம்​பாளை​யத்​தில் ஹன்க் நிறு​வனம் செயல்​பட்டு வரு​கிறது. இந்​நிறு​வனத்​தின் நிறு​வனர் மற்​றும் முதன்மை விஞ்​ஞானி பேளூர் ராமலிங்​கம் கார்த்​திக், தண்​ணீரில் இருந்து ஹைட்​ரஜன் எரி​வா​யுவை பிரித்​தெடுத்​து, சமையல் மற்​றும் தொழிற்​சாலைகளுக்கு பயன்​படுத்​தும் தொழில்​நுட்​பத்​தைக் கண்​டறிந்​துள்​ளார்.

‘ஹன்க் காஸ்’ என பெயரிடப்​பட்​டுள்ள இந்த புதிய கண்​டு​பிடிப்பு அறி​முக நிகழ்ச்​சி, அவி​நாசி அருகே நேற்று நடந்​தது. முதன்மை விஞ்​ஞானி பேளூர் ராமலிங்​கம் கார்த்​திக் செயல்​முறை விளக்​கம் அளித்​தார். இதில் நடிகரும், ஹன்க்காஸ் நிறு​வனத்​தின் முதன்மை இயக்​குநரு​மான சரத்​கு​மார், ராம்​ராஜ் காட்​டன் நிறு​வனர் கே.ஆர்​.​ நாக​ராஜன் ஆகியோர் பங்​கேற்​று, புதிய கண்​டு​பிடிப்பை அறி​முகப்​படுத்​தினர்.

இதுகுறித்து செய்​தி​யாளர்​களிடம் விஞ்​ஞானி பேளூர் ராமலிங்​கம் கார்த்​திக் கூறிய​தாவது: இயற்​கை​யான முறை​யில், கார்​பன் இல்​லாத நிலை​யில் தண்​ணீரை கொண்​டு, அதிலிருந்து கிரீன் ஹைட்​ரஜன் மூலம் நெருப்பை உரு​வாக்கி இதை தயாரித்​துள்​ளேன். சுமார் 20 ஆண்​டு​கள் ஆராய்ச்​சி​யின் விளை​வாக இது சாத்​தி​யப்​பட்​டுள்​ளது. கார்​பன் இல்​லாத எரிபொருளாக​வும், மிக​வும் பாது​காப்​பான​தாக​வும் இது உள்​ளது.

நாம் பயன்​படுத்​தும் ஒரு லிட்​டர் குடிநீரில், 1,225 லிட்​டர் ஹைட்​ரஜன் எடுக்​கலாம். இந்த ஹைட்​ரஜனை கைராய்டு எலட்​ரோலைட் மெம்ப்​ரைன் இயந்​திரங்​கள் மூலம் பிரித்​தெடுத்​து, அதை சமையல் மற்​றும் தொழிற்​சாலைகளுக்​குப் பயன்​படுத்​தலாம். ஒரு லிட்​டர் தண்​ணீரில் இருந்து பெறப்​படும் காஸை, ஒரு குடும்​பம் ஒரு மாத சமையலுக்கு பயன்​படுத்​தலாம்.

இதற்​கான இயந்​திரங்​கள் இன்​றைய நிலை​யில் ரூ.40 ஆயிர​மாகும். இந்த கண்​டு​பிடிப்பு தொடர்​பாக அங்​கீ​காரம் கோரி, மத்​திய அரசிடம் விண்​ணப்​பித்​ததுடன், மத்​திய அரசின் எரிசக்தி துறை​யினரை சந்​தித்து பல மணி நேரம் எடுத்​துரைத்​து, செயல்​விளக்​கங்​களை​யும் காட்​டி​யுள்​ளோம்” என்​றார்.

நிறு​வனத்​தின் முதன்மை இயக்​குந​ரான நடிகர் சரத்​கு​மார் கூறும்​போது, "இந்த காஸ் பொது​மக்​களின் பயன்​பாட்​டுக்கு ஏற்​ற​தாக இருக்​கும். அங்​கீ​காரம் தொடர்​பாக மத்​திய அரசின் எரிசக்​திதுறை அதி​காரி​களிடம் பேசி​யுள்​ளோம். இதை வீடு​கள், மருத்​து​வ​மனை​கள், தொழிற்​சாலைகள் என பல்​வேறு இடங்​களி​லும் பயன்​படுத்​தலாம்.

இந்த கண்​டு​பிடிப்பு அங்​கீகரிக்​கப்​பட்​டால், பொருளா​தா​ரத்​தில் மிகப்​பெரிய மாற்​றம் ஏற்​படும். முன்​னொரு காலத்​தில் ரயில், விமானம் போன்ற புதிய கண்​டு​பிடிப்​பு​களை மக்​கள் சந்​தேகத்​தோடு பார்த்​தா​லும், பின்​னர் ஏற்​றுக்​கொண்​டனர். அதே​போல, இந்த எரிபொருள் மாற்​ற​மும் ஆரம்​பத்​தில் கேள்​வி​களை எழுப்​பி​னாலும், விரை​வில் மக்​கள் புரிந்து ஏற்​றுக் கொள்​​வார்​கள் என்ற நம்​பிக்கை உள்​ளது” என்​றார்​.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory