» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழில் 100 மதிப்பெண்கள் எடுத்தால் 10ஆயிரம் ஊக்கத்தொகை : அன்பில் மகேஷ் அறிவிப்பு
சனி 20, செப்டம்பர் 2025 3:32:53 PM (IST)

பொதுத் தேர்வில் தமிழில் 100 மதிப்பெண்கள் எடுக்கும் மாணவர்களுக்கு ரூ.10,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.
சென்னையில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியதாவது: "பள்ளிக்கல்வித் துறை தன்னுடைய இலக்கை தாண்டி உழைத்து வருகிறது. பள்ளிக்கல்வித் துறை கட்டடங்கள் சாதியை ஒழிக்கும் கட்டடங்கள்..அன்புக் கரங்கள் மூலம் பல சிறப்பான திட்டங்கள் தமிழகத்தில் செயல்படுத்தப்படுகின்றன. 2,715 பட்டதாரி ஆசிரியர்கள் எங்களது பள்ளிக்கல்வித் துறை குடும்பத்தில் இணைந்துள்ளனர். கல்வி, சுகாதாரத்தை இரு கண்களாக கருதி முதல் அமைச்சர் செயல்படுத்தி வருகிறார்.
பொதுத் தேர்வில் தமிழில் 100 மதிப்பெண்கள் எடுக்கும் மாணவர்களுக்கு ரூ.10,000 ஊக்கத்தொகை வழங்கப்படும்.ஆசிரியர்களே 6 மாதத்தில் உங்களுக்கு பொதுத் தேர்வு வந்துவிடும். எங்களுக்கு பொதுத் தேர்தல் வந்துவிடும். நீங்களும் வெற்றி பெற வேண்டும், நாங்களும் வெற்றி பெற வேண்டும். நான் அரசியல் பேசவில்லை. அறிவு சார்ந்த விஷயத்தை கொண்டு செல்வதற்காகவே இங்கு பேசுகிறேன்" என்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் பள்ளி கட்டிடங்கள்: சபாநாயகர் அப்பாவு திறந்து வைத்தார்
சனி 20, செப்டம்பர் 2025 5:53:28 PM (IST)

தண்ணீரில் இருந்து ஹைட்ரஜன் எடுத்து கேஸ் தயாரிப்பு: தமிழக விஞ்ஞானி அசத்தல்!!
சனி 20, செப்டம்பர் 2025 5:05:44 PM (IST)

நான் ஒன்றும் தனி ஆள் கிடையாது; தேர்தலில் மோதி பார்ப்போம்: திமுகவுக்கு விஜய் சவால்
சனி 20, செப்டம்பர் 2025 3:52:29 PM (IST)

வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரிப்பு: பழைய குற்றாலம் அருவியில் குளிக்க நேரம் குறைப்பு
சனி 20, செப்டம்பர் 2025 3:21:52 PM (IST)

ஜிஎஸ்டி வரிகுறைப்பு என்பது மாற்றம் அல்ல புரட்சி : நிர்மலா சீதாராமன் பேச்சு
சனி 20, செப்டம்பர் 2025 12:55:47 PM (IST)

கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை : போலீசார் விசாரணை
சனி 20, செப்டம்பர் 2025 12:39:46 PM (IST)
