» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
குமரியில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை தீவிரம்: இதுவரை ரூ.30.48 லட்சம் பறிமுதல்!
வெள்ளி 27, மார்ச் 2026 12:50:33 PM (IST)
குமரி மாவட்டம் முழுவதும் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 30,48,410 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் ரூ.1,90,000 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
2026 தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை அமல்படுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1,90,000 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் தேர்தல் முறைகேடுகளைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன: பறக்கும் படைகள் 18 குழுக்கள், நிலையான கண்காணிப்புக் குழுக்கள் 18 குழுக்கள் 8 மணி நேரச் சுழற்சி அடிப்படையில் 24 மணி நேரமும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 26.03.2026 காலை 6:00 மணி முதல் 27.03.2026 காலை 6:00 மணி வரை நடத்தப்பட்ட சோதனையில், பத்மனாபபுரம் தொகுதியில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1,90,000/- பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மூலம் மாவட்டத்தில் இதுவரை கைப்பற்றப்பட்ட மொத்தத் தொகை ரூ.30,48,410/- ஆக உயர்ந்துள்ளது.
அதன்படி, பத்மனாபபுரம் (232) தொகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 1,90,000/- பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இத்தொகுதியைப் பொறுத்தவரை இதற்கு முன்னதாக ரூ. 69,000/- கைப்பற்றப்பட்ட நிலையில், தற்போது வரை மொத்தம் ரூ. 2,59,000/- பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மற்ற தொகுதிகளின் நிலவரப்படி, குளச்சல் (231) தொகுதியில் அதிகபட்சமாக ரூ. 8,69,150/- கைப்பற்றப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து கிள்ளியூர் (234) தொகுதியில் ரூ. 6,90,790/- மற்றும் விளவங்கோடு (233) தொகுதியில் ரூ. 5,49,370/- பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தலைநகர் தொகுதியான நாகர்கோவிலில் (230) இதுவரை ரூ. 4,30,400/- தொகையும், கன்னியாகுமரி (229) தொகுதியில் ரூ. 2,49,700/- தொகையும் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்டதற்காகக் கைப்பற்றப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் இந்தத் தீவிரமான நடவடிக்கைகள் மூலம், மார்ச் 27-ம் தேதி காலை 6:00 மணி நிலவரப்படி மாவட்டம் முழுவதும் மொத்தம் ரூ. 30,48,410/- பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் ரூ.50,000-க்கு மேல் ரொக்கப்பணம் கொண்டு செல்லும்போது அதற்குரிய முறையான ஆவணங்களை வைத்திருக்க வேண்டும் என மாவட்டத் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கேரளாவுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்ல அனுமதி : அனிதா கருத்துக்கு மனோ தங்கராஜ் எதிர்ப்பு!
சனி 30, மே 2026 11:33:26 AM (IST)

நாகர்கோவில்-எழும்பூர் இடையே நாளை சிறப்பு ரயில் இயக்கம்: தெற்கு ரயில்வே தகவல்
சனி 30, மே 2026 10:41:53 AM (IST)

இரத்த தானம் வழங்குவதில் மருத்துவ பணியாளர்கள் முன்மாதிரி : அமைச்சர் ராஜேஷ் குமார் பெருமிதம்!
வெள்ளி 29, மே 2026 3:59:42 PM (IST)

கன்னியாகுமரி வந்த விவேக் எக்ஸ்பிரஸ் ரயிலில் 10 கிலோ கஞ்சா பறிமுதல்!
வியாழன் 28, மே 2026 8:29:39 PM (IST)

நாகர்கோவில் – கோவை அதிவிரைவு ரயிலில் கூடுதல் பொதுப்பெட்டி இணைப்பு: தற்காலிக நடவடிக்கை!
வியாழன் 28, மே 2026 8:23:21 PM (IST)

சாலையில் நடந்து சென்றபோது பைக் மோதி விபத்து: மாணவி பரிதாப சாவு!
புதன் 27, மே 2026 12:52:57 PM (IST)


