» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தூத்துக்குடியில் நள்ளிரவில் புகையை வெளியேற்றும் தொழிற்சாலைகள் : பொதுமக்கள் கடும் அவதி
திங்கள் 23, மார்ச் 2026 11:23:09 AM (IST)

தூத்துக்குடியில் நள்ளிரவில் தொழிற்சாலைகள் வெளியேற்றும் புகை காரணமாக பொதுமக்கள் அவதியுற்று வருகின்றனர்.
துறைமுக நகரான தூத்துக்குடியில் பல்வேறு தொழிற்சாலைகள் அமைந்துள்ளன. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக தொழிற்சாலைகளில் இருந்து நள்ளிரவில் அதிகளவில் புகை வெளியேற்றப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
குறிப்பாக நகரின் மேற்கு பகுதிகளான கோரம்பள்ளம், இபி காலனி, மாதவன் நகர், மடத்தூர், சோரீஸ்புரம், பி அன் டி காலனி, திரவிய ரத்ன நகர், கதிர்வேல் நகர், அசோக் நகர், பாக்கியலட்சுமி நகர், பால்பாண்டி நகர், மில்லர்புரம், அண்ணா நகர், டிஎம்பி காலனி உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் மூச்சுத் தினறால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகின்றனர். குழந்தைகள், முதியவர்களுக்கு சுவாச பிரச்சினை, கண் எரிச்சல் உள்ளிட்டவை ஏற்படுகிறது. தொடர்ந்து வெளியேறும் புகையினால் சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுகிறது. எனவே பொதுமக்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் புகையை வெளியேற்றும் தொழிற்சாலைகள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மக்கள் கருத்து
ராஜாMar 23, 2026 - 01:25:02 PM | Posted IP 172.7*****
விவி டிட்டானியம் தான் அட்டூழியம்
ஏரியா காரன்Mar 23, 2026 - 01:15:22 PM | Posted IP 162.1*****
எந்த தொழிற்சாலை ? பெயர்களை வெளியிடுங்கள்
மேலும் தொடரும் செய்திகள்

137 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை: பாதுகாப்பு குறித்து குமரி மாவட்ட ஆட்சியர் ஆய்வு!
வியாழன் 26, மார்ச் 2026 12:48:58 PM (IST)

தேர்தல் நடத்தை விதிகளால் வணிகம் பாதிப்பு: போராட்டம் நடத்த வணிகர் சங்கம் முடிவு!
வியாழன் 26, மார்ச் 2026 12:09:02 PM (IST)

பொதுமக்களுக்கு இடையூறு இன்றி வாகன சோதனை : தேர்தல் அலுவலர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தல்!
வியாழன் 26, மார்ச் 2026 12:00:39 PM (IST)

பொய்கைக் காட்டில் விலங்குகளை வேட்டையாட முயன்ற இருவர் கைது: ரூ.1 லட்சம் அபராதம்!
புதன் 25, மார்ச் 2026 5:17:39 PM (IST)

பத்மநாபபுரம் வாக்குச்சாவடி மையங்களை தேர்தல் பொது பார்வையாளர் ஆய்வு!
செவ்வாய் 24, மார்ச் 2026 4:46:15 PM (IST)

வீட்டை உடைத்து 46 பவுன் நகை கொள்ளை - 24 மணி நேரத்தில் குற்றவாளி கைது; நகைகள் மீட்பு!
திங்கள் 23, மார்ச் 2026 9:40:44 PM (IST)


சங்கரன்Mar 23, 2026 - 10:16:16 PM | Posted IP 162.1*****