» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
பொய்கைக் காட்டில் விலங்குகளை வேட்டையாட முயன்ற இருவர் கைது: ரூ.1 லட்சம் அபராதம்!
புதன் 25, மார்ச் 2026 5:17:39 PM (IST)

ஆரல்வாய்மொழி பொய்கைக் காட்டில் விலங்குகளை வேட்டையாட முயன்ற இருவருக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதோடு, சிறையிலும் அடைக்கப்பட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழி வனத்துறையினர் பொய்கைக் காட்டுப் பகுதியில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, விலங்குகளை வேட்டையாட முயன்ற ஆரல்வாய்மொழியைச் சேர்ந்த பிரகாஷ் (24), சுரேஷ் (40) ஆகிய இருவரும் விலங்குகளை வேட்டையாடும் நோக்கில் பதுங்கியிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து இருவரையும் சுற்றி வளைத்துப் பிடித்த வனத்துறையினர், அவர்கள் வேட்டையாடப் பயன்படுத்திய அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களைப் பறிமுதல் செய்தனர். கன்னியாகுமரி மாவட்ட வன அலுவலர் மற்றும் வன உயிரினக் காப்பாளர் முனைவர் அ. அன்பு அவர்களின் உத்தரவின்படி, பிடிபட்ட இருவர் மீதும் வன உயிரின பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
வேட்டையாட முயன்ற குற்றத்திற்காக இருவருக்கும் ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. தொடர்ந்து, இருவரையும் வனத்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய வனத்துறையினர் சிறையில் அடைத்தனர். வனவிலங்குகளை வேட்டையாடுபவர்கள் மற்றும் வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட வனத்துறை எச்சரித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஜூன் 1 முதல் அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க அரசு ஆணை: குமரி மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி!
சனி 30, மே 2026 4:02:42 PM (IST)

கேரளாவுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்ல அனுமதி : அனிதா கருத்துக்கு மனோ தங்கராஜ் எதிர்ப்பு!
சனி 30, மே 2026 11:33:26 AM (IST)

நாகர்கோவில்-எழும்பூர் இடையே நாளை சிறப்பு ரயில் இயக்கம்: தெற்கு ரயில்வே தகவல்
சனி 30, மே 2026 10:41:53 AM (IST)

இரத்த தானம் வழங்குவதில் மருத்துவ பணியாளர்கள் முன்மாதிரி : அமைச்சர் ராஜேஷ் குமார் பெருமிதம்!
வெள்ளி 29, மே 2026 3:59:42 PM (IST)

கன்னியாகுமரி வந்த விவேக் எக்ஸ்பிரஸ் ரயிலில் 10 கிலோ கஞ்சா பறிமுதல்!
வியாழன் 28, மே 2026 8:29:39 PM (IST)

நாகர்கோவில் – கோவை அதிவிரைவு ரயிலில் கூடுதல் பொதுப்பெட்டி இணைப்பு: தற்காலிக நடவடிக்கை!
வியாழன் 28, மே 2026 8:23:21 PM (IST)


