» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
இந்து முன்னணி நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு: மாநிலத் துணைத் தலைவர் கண்டனம்!
வெள்ளி 17, ஜூலை 2026 11:01:05 AM (IST)
நீதிமன்ற உத்தரவின்படி ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிப் போராட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி மாநிலத் தலைவர் மற்றும் நிர்வாகிகள் மீது திருவட்டார் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளதற்கு இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து இந்து முன்னணி மாநிலத் துணைத் தலைவர் வி.பி. ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை: கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் ஒன்றியத்தில் உள்ள மாத்தூர் தொட்டிப் பாலம் சுற்றுலாத் தலப் பகுதியில் அரசு அனுமதியின்றி வழிபாட்டுத் தலம் கட்டப்பட்டுள்ளது. இந்த ஆக்கிரமிப்பை முழுமையாக இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், அரசு இந்த உத்தரவை அமல்படுத்தாததைக் கண்டித்து, கடந்த ஜூலை 12, 2026 அன்று இந்து முன்னணி மாநிலத் தலைவர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.அமைதியான முறையில், போக்குவரத்து மற்றும் ஆம்புலன்ஸ் போன்ற அவசர வாகனங்களுக்கு வழிவிட்டு ஒழுங்கு நடைமுறைகளுடன் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. எந்தவித சட்டம் - ஒழுங்குப் பிரச்சினையும் ஏற்படாத சூழலில், திருவட்டார் காவல் நிலைய ஆய்வாளர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற இந்து முன்னணி மாநிலத் தலைவர் மற்றும் நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளார்.
அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையின்படி ஜனநாயக ரீதியில் நடைபெற்ற போராட்டத்திற்கு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. முந்தைய ஆட்சிக் காலங்களில் மக்கள் பிரச்சினைகளுக்காகப் போராடியவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட அதே போன்ற அடக்குமுறை நடவடிக்கைகளைத் தற்போதைய தவெக அரசும் கையாண்டு வருகிறது. எனவே, இந்து முன்னணி நிர்வாகிகள் மீது பதியப்பட்டுள்ள இந்த வழக்குகளைத் தமிழக அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என அந்த அறிக்கையில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆடை உற்பத்தியில் புதுமையைப் புகுத்த வேண்டும் : நெசவாளர்களுக்கு ஆட்சியர் பிரதாப் வேண்டுகோள்
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 5:53:02 PM (IST)

பராமரிப்புப் பணி: குருவாயூர் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 8:42:23 AM (IST)

மயிலாடி சிற்பிகளின் கைவண்ணம்: ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 11 அடி உயர கிருஷ்ணர் சிலை!
வியாழன் 6, ஆகஸ்ட் 2026 12:29:11 PM (IST)

தமிழக ரயில்வே வளர்ச்சிக்காகத் தனி அமைச்சரை நியமிக்க வேண்டும்: பயணிகள் சங்கம் தீர்மானம்!
செவ்வாய் 4, ஆகஸ்ட் 2026 5:54:50 PM (IST)

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆடி களப பூஜை தொடங்கியது- திரளான பக்தர்கள் பங்கேற்பு
செவ்வாய் 4, ஆகஸ்ட் 2026 10:43:32 AM (IST)

வீராணமங்கலம் பழையாற்றில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்: திரளான பெண்கள் பங்கேற்பு!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 9:32:50 PM (IST)


