» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

நாகர்கோவில் - கோவை அதிவிரைவு ரயிலில் கூடுதலாக ஒரு படுக்கை வசதிப் பெட்டி தற்காலிக இணைப்பு!

வெள்ளி 17, ஜூலை 2026 4:25:32 PM (IST)

நாகர்கோவில் - கோவை இடையே இயக்கப்படும் அதிவிரைவு ரயிலில் இன்று முதல் கூடுதலாக ஒரு படுக்கை வசதி முன்பதிவு பெட்டி தற்காலிகமாக இணைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு இரயில்வே செய்திக் குறிப்பில் "பயணிகளின் தேவையை முன்னிட்டு நாகர்கோவில் - கோவை இடையே இயக்கப்படும் அதிவிரைவு ரயிலில் கூடுதலாக ஒரு படுக்கை வசதி முன்பதிவு பெட்டி தற்காலிகமாக இணைக்கப்பட உள்ளது. இக்கூடுதல் பெட்டி இணைப்பின் மூலம், காத்திருப்போர் பட்டியலில் உள்ள 72 பயணிகள் பயணிப்பதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ரயில் கால அட்டவணை:

நாகர்கோவில் - கோவை அதிவிரைவு ரயில்: நாகர்கோவிலில் இருந்து கோவைக்கு இயக்கப்படும் ரயிலில் ஜூலை 17, 2026 முதல் ஜூலை 30, 2026 வரை இக்கூடுதல் படுக்கை வசதிப் பெட்டி தற்காலிகமாக இணைக்கப்பட்டுச் சேவை வழங்கப்படும்.

கோவை - நாகர்கோவில் அதிவிரைவு ரயில்: மறுமார்க்கத்தில் கோவையில் இருந்து நாகர்கோவிலுக்கு இயக்கப்படும் ரயிலில் இந்த கூடுதல் பெட்டி இணைப்பு நடைமுறை ஜூலை 17, 2026 முதல் ஜூலை 31, 2026 வரை தொடரும் எனத் தெற்கு இரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory