» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
லஞ்சப் புகாரில் சிக்கிய காவல் ஆய்வாளர் அதிரடி இடமாற்றம்: நெல்லை சரக டி.ஐ.ஜி. உத்தரவு!
சனி 22, நவம்பர் 2025 11:27:57 AM (IST)
குமரி மாவட்டத்தில் லஞ்சப் புகாரில் சிக்கிய காவல் ஆய்வாளரை தூத்துக்குடி மாவட்டத்திற்கு பணி இடமாற்றம் செய்து நெல்லை சரக காவல்துறை துணைத் தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சைபர் க்ரைம் காவல் நிலைய காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் சொர்ண ராணி. இவர் கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரியும் போது லஞ்சம் பெற்ற வீடியோ மற்றும் புகார் நாகர்கோவில் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினரிடம் அளித்து லஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்யும் நிலையில் உள்ளனர்.
இந்த நிலையில் நாகர்கோவில் சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த காவல் ஆய்வாளரான ஸ்வர்ண ராணி லஞ்சம் ஊழலில் ஈடுபட்டதாலும் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாலும் இவரை கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் அவரை ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவு பிறப்பித்தார். இந்த நிலையில் நெல்லை சரக காவல்துறை துணைத் தலைவர் சொர்ண ராணியை தூத்துக்குடி மாவட்டத்திற்கு பணி இடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பிரதமர் மோடி வருகை: கன்னியாகுமரிக்கு தினசரி இரயில்கள் கிடைக்குமா? – பயணிகள் எதிர்பார்ப்பு!
வெள்ளி 20, பிப்ரவரி 2026 8:10:46 PM (IST)

அமிர்த் பாரத் கால அட்டவணையை மாற்றக் கோரிக்கை: நள்ளிரவில் சேருவதால் ரயில் பயணிகள் அவதி
வியாழன் 19, பிப்ரவரி 2026 8:02:34 PM (IST)

சீசன் காலத்தில் ஏமாற்றிய கேரை மீன்கள்: சூறைக் காற்றால் பாதியிலேயே கரை திரும்பிய மீனவர்கள்!
வியாழன் 19, பிப்ரவரி 2026 5:10:51 PM (IST)

விபத்தில் மூளைச்சாவு அடைந்த புதுமாப்பிள்ளை: உடல் உறுப்புகள் தானம் மூலம் 6 பேருக்கு மறுவாழ்வு
வியாழன் 19, பிப்ரவரி 2026 8:41:44 AM (IST)

துபாயில் வேலை என ஆசை காட்டி ரூ.1.5 கோடி மோசடி செய்தவர் 24 மணி நேரத்தில் கைது!
புதன் 18, பிப்ரவரி 2026 4:55:56 PM (IST)

மருத்துவ மேல்படிப்புக்கு சீட் வாங்கித் தருவதாக ரூ.18 லட்சம் மோசடி: தம்பதி உட்பட 3 பேர் மீது வழக்கு!
புதன் 18, பிப்ரவரி 2026 8:41:13 AM (IST)

