» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
லஞ்சப் புகாரில் சிக்கிய காவல் ஆய்வாளர் அதிரடி இடமாற்றம்: நெல்லை சரக டி.ஐ.ஜி. உத்தரவு!
சனி 22, நவம்பர் 2025 11:27:57 AM (IST)
குமரி மாவட்டத்தில் லஞ்சப் புகாரில் சிக்கிய காவல் ஆய்வாளரை தூத்துக்குடி மாவட்டத்திற்கு பணி இடமாற்றம் செய்து நெல்லை சரக காவல்துறை துணைத் தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சைபர் க்ரைம் காவல் நிலைய காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் சொர்ண ராணி. இவர் கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரியும் போது லஞ்சம் பெற்ற வீடியோ மற்றும் புகார் நாகர்கோவில் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினரிடம் அளித்து லஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்யும் நிலையில் உள்ளனர்.
இந்த நிலையில் நாகர்கோவில் சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த காவல் ஆய்வாளரான ஸ்வர்ண ராணி லஞ்சம் ஊழலில் ஈடுபட்டதாலும் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாலும் இவரை கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் அவரை ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவு பிறப்பித்தார். இந்த நிலையில் நெல்லை சரக காவல்துறை துணைத் தலைவர் சொர்ண ராணியை தூத்துக்குடி மாவட்டத்திற்கு பணி இடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தக்கலையில் 8ஆம் தேதி நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்: ஆட்சியர் ஆய்வு
செவ்வாய் 6, ஜனவரி 2026 5:30:33 PM (IST)

கோதையாற்றில் மீண்டும் தென்பட்ட முதலை: திற்பரப்பு அருகே பரபரப்பு !
செவ்வாய் 6, ஜனவரி 2026 4:41:22 PM (IST)

சிறுமி கடத்தல்: தலைமறைவான அண்ணன், தம்பி தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு!
செவ்வாய் 6, ஜனவரி 2026 12:13:24 PM (IST)

தமிழ்நாட்டில் ரயில்வே முனைய திறனை அதிகரிக்க பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை!
திங்கள் 5, ஜனவரி 2026 4:58:43 PM (IST)

பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் வீடு வீடாக விநியோகம்: ஆட்சியர் ஆய்வு
திங்கள் 5, ஜனவரி 2026 4:48:37 PM (IST)

நாகர்கோவில் அருகே அந்தியோதயா ரயில் மீது கல்வீச்சு: வடமாநில வாலிபர் கைது
திங்கள் 5, ஜனவரி 2026 8:32:13 AM (IST)

