» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தலைமுடி உதிர்வால் மன வேதனை: இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை!
புதன் 19, நவம்பர் 2025 5:36:37 PM (IST)
தென் தாமரைக்குளத்தில் தலைமுடி உதிர்வால் மன வேதனையில் இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கன்னியாகுமரி மாவட்டம் தென் தாமரைக்குளம் கீழச்சாலை பகுதியில் வசித்து வந்த தங்கச்சாமி அவர்களின் இரண்டாவது மகள் ஐஸ்வர்யா (27), பிஎஸ்சி பட்டதாரி. கடந்த மூன்று ஆண்டுகளாக தலைமுடி அதிகமாக உதிர்ந்து வந்ததால் இவர் தீவிரமான மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
தான் உயிரோடு இருப்பதை விட சாவது மேல் என்று அடிக்கடி மன வேதனையை வெளிப்படுத்தி வந்ததாக குடும்பத்தார் தெரிவித்தனர். இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில், ஐஸ்வர்யா மின்விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தென் தாமரைக்குளம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பிரதமர் மோடி வருகை: கன்னியாகுமரிக்கு தினசரி இரயில்கள் கிடைக்குமா? – பயணிகள் எதிர்பார்ப்பு!
வெள்ளி 20, பிப்ரவரி 2026 8:10:46 PM (IST)

அமிர்த் பாரத் கால அட்டவணையை மாற்றக் கோரிக்கை: நள்ளிரவில் சேருவதால் ரயில் பயணிகள் அவதி
வியாழன் 19, பிப்ரவரி 2026 8:02:34 PM (IST)

சீசன் காலத்தில் ஏமாற்றிய கேரை மீன்கள்: சூறைக் காற்றால் பாதியிலேயே கரை திரும்பிய மீனவர்கள்!
வியாழன் 19, பிப்ரவரி 2026 5:10:51 PM (IST)

விபத்தில் மூளைச்சாவு அடைந்த புதுமாப்பிள்ளை: உடல் உறுப்புகள் தானம் மூலம் 6 பேருக்கு மறுவாழ்வு
வியாழன் 19, பிப்ரவரி 2026 8:41:44 AM (IST)

துபாயில் வேலை என ஆசை காட்டி ரூ.1.5 கோடி மோசடி செய்தவர் 24 மணி நேரத்தில் கைது!
புதன் 18, பிப்ரவரி 2026 4:55:56 PM (IST)

மருத்துவ மேல்படிப்புக்கு சீட் வாங்கித் தருவதாக ரூ.18 லட்சம் மோசடி: தம்பதி உட்பட 3 பேர் மீது வழக்கு!
புதன் 18, பிப்ரவரி 2026 8:41:13 AM (IST)

