» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தலைமுடி உதிர்வால் மன வேதனை: இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை!
புதன் 19, நவம்பர் 2025 5:36:37 PM (IST)
தென் தாமரைக்குளத்தில் தலைமுடி உதிர்வால் மன வேதனையில் இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கன்னியாகுமரி மாவட்டம் தென் தாமரைக்குளம் கீழச்சாலை பகுதியில் வசித்து வந்த தங்கச்சாமி அவர்களின் இரண்டாவது மகள் ஐஸ்வர்யா (27), பிஎஸ்சி பட்டதாரி. கடந்த மூன்று ஆண்டுகளாக தலைமுடி அதிகமாக உதிர்ந்து வந்ததால் இவர் தீவிரமான மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
தான் உயிரோடு இருப்பதை விட சாவது மேல் என்று அடிக்கடி மன வேதனையை வெளிப்படுத்தி வந்ததாக குடும்பத்தார் தெரிவித்தனர். இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில், ஐஸ்வர்யா மின்விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தென் தாமரைக்குளம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாகர்கோவிலில் குண்டும், குழியுமான சாலைகள் : பள்ளி மாணவ மாணவிகள் வாகன ஓட்டிகள் அவதி
வியாழன் 20, நவம்பர் 2025 5:41:18 PM (IST)

டாஸ்மாக் கடையை அகற்றும் வரை போராட்டம் தொடரும்: தளவாய் சுந்தரம் ஆவேசப் பேச்சு!
வியாழன் 20, நவம்பர் 2025 5:32:57 PM (IST)

நெல்லை, தூத்துக்குடி, குமரியில் கனமழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!
வியாழன் 20, நவம்பர் 2025 5:10:10 PM (IST)

அசுத்தமான ஆறுகள், குளங்களில் நீராடுவதை தவிர்க்க வேண்டும் : ஆட்சியர் அறிவுறுத்தல்!
புதன் 19, நவம்பர் 2025 5:44:54 PM (IST)

பெண்ணிடம் ஆபாச செய்கை காட்டியவர் கைது!
புதன் 19, நவம்பர் 2025 8:36:38 AM (IST)

குமரி மாவட்டத்தில் பொய்கை அணை திறப்பு: 450.23 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்
செவ்வாய் 18, நவம்பர் 2025 8:58:05 PM (IST)


.gif)