» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
பெண்ணிடம் ஆபாச செய்கை காட்டியவர் கைது!
புதன் 19, நவம்பர் 2025 8:36:38 AM (IST)
இரணியல் அருகே பெண்ணிடம் ஆபாச செய்கை காட்டியவரை போலீசார் கைது செய்தனர்.
குமரி மாவட்டம் இரணியல் அருகே ஒரு கிராமத்தில் திருமணமான 37 வயது பெண்ணுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வருவதால் குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார். மொட்டவிளையைச் சேர்ந்தவர் பச்சைமால் மகன் தர்மலிங்கம் (வயது50). இவர் அந்த பெண்ணின் வீட்டு ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்து ஆபாச செய்கை கட்டியுள்ளார்.
இதுகுறித்து அந்த பெண் இரணியல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் தர்மலிங்கத்தை அழைத்து விசாரித்து எச்சரித்து அனுப்பினர். இந்தநிலையில் சம்பவத்தன்றும் தர்மலிங்கம் அந்த பெண்ணின் வீட்டை ஜன்னல் வழியாக எட்டி பார்த்துள்ளார். இதை கண்ட அந்த பெண் சத்தம் போட்டு தட்டிக் கேட்டுள்ளார்.
அதற்கு தர்மலிங்கம் தகாத வார்த்தைகளால் பேசி கையில் வைத்திருந்த சுத்தியலால் அடித்து விடுவேன் என மிரட்டி உள்ளார். மேலும், அந்த பெண்ணிடம் ஆபாச செய்கை காட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த பெண் இரணியல் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் இரணியல் போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்தோணியம்மாள் விசாரணை நடத்தி தர்மலிங்கம் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தார். பின்னர், அவரை இரணியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குமரி மாவட்டத்தில் பொய்கை அணை திறப்பு: 450.23 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்
செவ்வாய் 18, நவம்பர் 2025 8:58:05 PM (IST)

குமரியில் ஐயப்ப பக்தர்கள் சீசன் தொடங்கியது: பாதுகாப்புக்காக கடலில் மிதவைகள் அமைப்பு
செவ்வாய் 18, நவம்பர் 2025 8:51:15 PM (IST)

கடலில் படகு இரண்டாக உடைந்து விபத்து: மீனவர் தப்பினார் - மற்றொருவர் மாயம்!
திங்கள் 17, நவம்பர் 2025 4:25:54 PM (IST)

குமரி மாவட்டத்தில் இதுவரை 2,64,716 எஸ்ஐஆர் படிவங்கள் பதிவு: ஆட்சியர் தகவல்
திங்கள் 17, நவம்பர் 2025 12:23:04 PM (IST)

ஓடும் பஸ்சில் இருந்து கண்டக்டரை எட்டி உதைத்த போதை ஆசாமி கைது!
திங்கள் 17, நவம்பர் 2025 8:47:52 AM (IST)

மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டி : அமைச்சர் த.மனோ தங்கராஜ் வழங்கினார்!
சனி 15, நவம்பர் 2025 4:48:55 PM (IST)


.gif)