» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
குமரி மாவட்டத்தில் பொய்கை அணை திறப்பு: 450.23 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்
செவ்வாய் 18, நவம்பர் 2025 8:58:05 PM (IST)

குமரி மாவட்டத்தில் விவசாய நிலங்களின் பாசன பயன்பாட்டிற்காக ஆரல்வாய்மொழி பொய்கை அணையிலிருந்து மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, பொய்கை அணையிலிருந்து, தண்ணீர் திறந்து விட்டார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் விவசாய நிலங்களின் பாசன பயன்பாட்டிற்காக மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, இன்று (18.11.2025) ஆரல்வாய்மொழி பொய்கை அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட்டு தெரிவிக்கையில்- கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை வட்டம், ஆரல்வாய்மொழி கிராமத்தில் அமைந்துள்ள பொய்கை அணையிலிருந்து, கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை வட்டம் மற்றும் திருநெல்வேலி மாவட்டம் இராதாபுரம் வட்ட பாசன நிலங்களுக்கு இன்று (18.11.2025) முதல் 03.12.2025 வரை 16 நாட்களுக்கு வினாடிக்கு 30 கன அடி வீதம் தண்ணீர் இருப்பை பொறுத்து தண்ணீர் திறந்துவிட அனுமதி அளித்து அரசு ஆணையிட்டுள்ளது.
இதன் மூலம் கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை வட்டம் மற்றும் திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம் வட்டங்களில் உள்ள ஆரல்வாய்மொழி, குமாரபுரம் மற்றும் பழவூர் கிராமங்களில் உள்ள 450.23 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்றார்.
நிகழ்ச்சியில் செயற்பொறியாளர் நீர்வளத்துறை அருள்சன் பிரைட், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) ஜென்கின் பிரபாகர், உதவி செயற்பொறியாளர்கள் வல்சன் போஸ், அஜீஸ், கோதையாறு நீர்பாசன தலைவர் வின்ஸ் ஆன்றோ, விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள், துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குமரியில் ஐயப்ப பக்தர்கள் சீசன் தொடங்கியது: பாதுகாப்புக்காக கடலில் மிதவைகள் அமைப்பு
செவ்வாய் 18, நவம்பர் 2025 8:51:15 PM (IST)

கடலில் படகு இரண்டாக உடைந்து விபத்து: மீனவர் தப்பினார் - மற்றொருவர் மாயம்!
திங்கள் 17, நவம்பர் 2025 4:25:54 PM (IST)

குமரி மாவட்டத்தில் இதுவரை 2,64,716 எஸ்ஐஆர் படிவங்கள் பதிவு: ஆட்சியர் தகவல்
திங்கள் 17, நவம்பர் 2025 12:23:04 PM (IST)

ஓடும் பஸ்சில் இருந்து கண்டக்டரை எட்டி உதைத்த போதை ஆசாமி கைது!
திங்கள் 17, நவம்பர் 2025 8:47:52 AM (IST)

மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டி : அமைச்சர் த.மனோ தங்கராஜ் வழங்கினார்!
சனி 15, நவம்பர் 2025 4:48:55 PM (IST)

பரோடா கிசான் பக்வாடா நிகழ்ச்சியில் ரூ.1 கோடி கடனுதவி : ஆட்சியர் அழகுமீனா வழங்கினார்
வெள்ளி 14, நவம்பர் 2025 10:24:39 AM (IST)


.gif)